தேவதை கவிதைகள்-1



எனக்காக ரோஜாக்களை
ஏந்தி வரும் நாளில்
உன் பெயர்
தேவதை!

சிரிப்பைக் கேட்டால்
வெட்கப்படுகிறாள்
வெட்கத்தைக் கேட்டால்
முத்தமிடுகிறாள்
முத்தத்தைக் கேட்டால்
உதைக்கிறாள்
பிரச்சினை தேவதைகளின்
காதுகளிலா
காதலிலா?

தேவதைக்கும் எனக்கும்
பந்தயம்
அவள் சொன்னாள்
”என்னை வெட்கப்பட வைக்க முடியாது?”
நான் கேட்டேன்
”ஏன் முடியாது?”
சரி பார்க்கலாம் என
அவள் கோபத்தில் சிவக்க
ஆரம்பித்தது பந்தயம்
ஒரே ஒரு கேள்வியில்
தோல்வியை ஏற்றுக் கொண்டாள்
வெட்கப்பட்டுக் கொண்டே!!!!
நான் கேட்டதெல்லாம்
“நீ தேவதையான நாள் என்னைக்கு?”
மட்டுமே

(தேவதை கவிதைகள், தேவதை வரும்வரை தொடரும்)

*************************************

கணேஷ்-சியாமளா! சில நன்றிகள்


கணேஷ்‍-சியாமளா தொடர் எழுதுவேன் என்று நான் ஆரம்பத்தில் நினைக்கவில்லை. முதல் மூன்று எபிசோட்களை தனித்தனி சிறுகதைகளாகத் தான் நினைத்து வைத்திருந்தேன். மூன்றையும் கொஞ்சம் ஆர்டர் மாற்றி, கேரக்டர்களுக்கு பெயர் ஒன்றாக மெயின்டெயின் பண்ணியபோது, படிப்பவர்கள் இவ்வளவு துள்ளலுடன் படித்து, கமெண்ட் போடுவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. நான் முதன்முதலில் தொடர்ச்சியாக இவ்வளவு அதிகமான கமெண்ட்ஸ் வாங்குவது இது தான் முதல் தடவை. 21 எபிசோடும் தமிழீஷில் பாப்புலர். "ganesh shyamla" என்ற கூகிள் ஸர்ச் மூலம் வந்தவர்கள் 2000 பேருக்கும் மேல். இந்த தொடரை நான் ஆரம்பித்தபோது 48 பேருடன் தள்ளாடிக் கொண்டிருந்த என் ஃபாலோயர்ஸ் கேட்ஜட், இப்போது செஞ்சுரி தாண்டி 121 என ஓடிக் கொண்டிருக்கிறது. சின்ன அம்மிணி, நான் ஆதவன், புதுவை சிவா, பொற்கொடி, ஷங்கர், குட்டி, காம்ப்ளான் சூர்யா என நிறைய நல்ல மக்கள் ரெகுலர் ரீடர்ஸ்களாக‌ கிடைத்துவிட்டனர். அவ‌ர்க‌ளுக்கு ந‌ன்றி.

இதைத் த‌விர‌ மொத்த‌ 21 எபிசோட்க‌ளையும் சைல‌ண்ட் ரீட‌ராக‌ ப‌டித்து, க்ளைமேக்ஸ் போஸ்ட்டில் க‌மெண்ட் போட்ட‌வ‌ர்க‌ளும் உண்டு, த‌னி இமெயில் அனுப்பி என்னை உருக‌ வைத்த‌ வாச‌க‌ர்க‌ளும் உண்டு. "ச்சே, இந்த‌ உல‌க‌ம் என்கிட்ட‌ எவ்வ‌ள‌வு எதிர்பார்க்காது தெரியாம‌லே நான் வாழ்ந்துகிட்டு இருக்கேன்னு தோணுச்சி"

கேபிள் ஷ‌ங்க‌ரிட‌ம் இர‌ண்டு முறை ப‌திவ‌ர் ச‌ந்திப்பில் பேசி இருக்கிறேன். என் ப்ளாக் யூஆர்எல் கூட அவருக்கு ச‌ரியாக‌ நியாப‌க‌ம் இருக்காது என நினைக்கிறேன். இந்த‌ தொட‌ர் ஆர‌ம்பித்த‌வுட‌ன் என்னை செல்ஃபோனில் அழைத்துப்பேசி, "ஸ்டோரி ரொம்ப‌ ந‌ல்லா போகுது க‌ணேஷ், அதை அப்ப‌டி ப‌ண்ணியிருக்க‌லாமோ?" என‌ ச்சின்ன‌ சின்ன‌ க‌ரெக்ச‌ன்ஸ் கொடுத்து என்னை ரொம்ப‌ உற்சாக‌ப்ப‌டுத்தினார். "என்ன‌ ச‌ட்டுன்னு முடிச்சீட்டீங்க‌.. இங்கே தானே ஆக்சுவ‌லா ஸ்டோரி ஆர‌ம்பிச்சி இருக்க‌ணும். மிஸ் ப‌ண்ணிட்டீங்க‌ க‌ணேஷ்?" என‌ நான் தொட‌ரை முடித்த‌வுட‌ன் அவ‌ர் அழைத்து சொன்ன‌போதுதான், அவ‌ர் சொன்ன‌ விஷ‌ய‌ங்க‌ள் என‌க்கு புரிய‌ ஆர‌ம்பித்த‌து. அவ‌ர் மீது ம‌ரியாதை இன்னும் அதிக‌மாகிய‌து. தேங்க் யூ ஸார் :)

அத‌ற்குபின் ஒரு விஷ‌ய‌ம்... மூன்று எபிசோடுக‌ளுக்கு பின் இந்த‌ தொட‌ரை எப்ப‌டி எடுத்துசெல்வ‌து என‌ ஏக‌க் குழ‌ப்ப‌ம். அப்போது தான் ப‌திவ‌ர் ராஜ‌ல‌ட்சுமி அவ‌ர்களுடன் "சாட்"டிக் கொண்டிருக்கும்போது என்னை சிறுகதை எழுதுவதற்கு சொன்ன‌ ஒன்லைன், "நமக்கு பிடித்தவர்களை விட, நம்மை பிடித்தவர்களால் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்". இந்த‌ ஒன்லைனை வ‌ச்சி நாம‌ ஏன் தொட‌ர்க‌தை எழுத‌க் கூடாது என‌ விட்ட‌த்தை பார்த்து யோசித்த‌போது தான் உள்ளே வ‌ந்தாள் திவ்யா. அந்த‌ knot உள்ளே வ‌ந்த‌வுட‌ன் ஆன்சைட், காலேஜ் ல‌வ், ஹைய‌ர் ஸ்ட‌டீஸ் என‌ நிறைய‌ விஷ‌ய‌ங்க‌ள் தானாக‌ உள்ளே வ‌ர‌ ஆர‌ம்பித்த‌ன‌. 21 எபிசோட் வ‌ரைக்கும் வ‌ந்தாச்சி. ஸோ, Thanks to Raji tooooooo :)

போனாபோகுதுன்னு ஹீரோவுக்கு கணேஷ்ன்னு என் பேரை வச்சேன். எல்லாரும் வார்த்தை மாறாம கேக்குற ஒரே கேள்வி.. "யாரு சியாமளா? யாரு திவ்யா?" தெரியாதவங்க, வாசகர்கள் கேக்குறாங்கன்னா, ஓ.கே பரவாயில்ல.. ஆனா ஆஃபிஸ்ல கூட வேலை பாக்குறவங்க, "யாரு சியாமளா?"ன்னு கேட்டா "நான் என்ன்ன்ன்ன்ன்ன்ன‌ பண்ணுவேன்?" சொல்லுங்க... அதே மாதிரி என் காலேஜ் ஃப்ரண்ட்ஸும் "யாருடா திவ்யா?"ன்னு வேற கேக்குறாய்ய்ங்க.. Grrrrrrrrrrrrrrrrrர் :(

தென்.. இந்த வேலன்டன்ஸ்டேக்கு எல்லாரும் கவிதை, கதைன்னு புரட்சி பண்ணிக்கிட்டு இருக்கும்போது எதுவும் ட்ரை பண்ணாம இருக்கியேடான்னு, கனவுல வேலன்டைன் கத்தி எடுத்துட்டு விரட்டுறாரு என்னங்க பண்ணுறது?

எல்லாருக்கும் ஒரு ரிக்வெஸ்ட். கொஞ்ச‌ நாள் வெயிட் ப‌ண்ணுங்க‌.. கொஞ்ச‌ம் பெர்ச‌ன‌ல் வேலைக‌ள் என்னை பாடாய்ப‌டுத்துவ‌தால், ஒரு ஷார்ட் ப்ரேக் எடுக்க‌லாம்ன்னு இருக்கேன். சீக்கிர‌ம் வ‌ந்துடுவேன். சீக்கிர‌ம் இன்னொரு தொட‌ர்கூட‌ ஆர‌ம்பிக்க‌லாம் :) So Stay tuned!!!!!

'காதல்'ல்ல இருக்குறவங்களுக்கும், என்னை மாதிரி 'காதல்'லை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும், HAPPY Valentine's Day!!!!!!!!!!!!!(சாமி சத்தியமா, அந்த ச்சின்னப்பையன் நான் இல்லைங்க)

****************************

சியாமளா-21: கணேஷ் யாருக்கு?(க்ளைமேக்ஸ்)

கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21

காரில் போய்க் கொண்டிருந்தனர். திவ்யா அருகில் கணேஷ் அமர்ந்திருந்தான். கணேஷ் இப்போது கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருந்தான். ஆனால் திவ்யா நிலநடுக்கம் வந்துபோன இடம் போல் இருந்தாள். ரோட்டை பார்த்துக் கொண்டே திவ்யா சீரியஸாகக் கேட்டாள்.

“நீ கட்டிக்கப் போற பொண்ணு என்னை விட அழகா இருப்பாளா கணேஷ்?”

அழுவதா சிரிப்பதா? கணேஷ்க்கு தெரியவில்லை.

ஒரு நிமிடம் முழுவதும் போனபின்பு, பொறுமையில்லாமல் கேட்டாள் திவ்யா, “உண்மைலயேவா?”

“நான் எதுவுமே சொல்லலீயே?” என பதறிபோய் பதில் அளித்தான்.

“அப்ப நான் தான் அழகுன்னு சொல்ற..” என சொல்லிக் கொண்டே “ஹா ஹா ஹா” வென கார் அதிர சிரித்தாள்.

“என்ன பொண்ணு இவ” என மனதிற்குள் நினைத்துக் கொண்டு அவளை வெறித்து பார்த்தான். ஒரு லுக்ல பார்த்தா வில்லன்(வில்லி) சிரிப்பது மாதிரியும் இருந்தது.

“ஆனா ஒண்ணு கணேஷ்.. இந்த விஷயத்தை என்கிட்ட சொல்லாமலேயே நீ இந்தியா போய் இருக்கலாம். நீ இப்ப இவ்வளோ சொன்னதுனால தான், என்னால் ஈஸியா எடுத்துக்க முடியல” என லைட்டாக கண்கலங்க ஆரம்பித்தாள். பெண்களால் மட்டும் தான் ஃப்ராக்சன் ஆஃப் செகண்டில் மூட் மாற்றி பேசமுடியும்.

“இல்ல.. அது வந்து..” அவளை சமாதானப்படுத்தலாம் என ஆரம்பத்தான், ரிஸ்க் எடுக்க விரும்பாததால் நிறுத்திக் கொண்டான்.

“இட்ஸ் ஓ.கே. ஆனா என்னை கல்யாணத்துக்கு கூப்பிடுவீயா கணேஷ்” என யோசித்துவிட்டு கேட்டாள்.

“ “

“சரி.. ஓ.கே. பட் ஒன் கண்டிஷன்? நீ அதுக்கு ஒத்துக்கிட்டா நான் கல்யாணத்துக்கு வரமாட்டேன்” தூண்டிலில் மண்புழுவை வைத்துக் கொண்டு வீசினாள்.

கணேஷுக்கு அந்த கண்டிஷன் என்ன என தெரியாமல் ஒத்துக்கொள்ளக் கூடாது என நினைத்துக் கொண்டிருந்தாலும், இவளை கல்யாணத்திற்காக இந்தியா வரை வரவைத்து சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளவும் விரும்பவில்லை.”ஒரு வேளை கிஸ் கேப்பாளோ? 7/ஜி ரெயின்போ ஸ்டைல்ல… அப்படி இருக்குமோ, ஒருவேளை இப்படி இருக்குமோ?” என ஏடாகூடாமாக மண்டையக் குடைந்தான். “இவ கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டா, இல்ல வில்லியா என இந்த செகண்ட் வரை புரியாமல் நடிகர் பாண்டியராஜன் போல திருதிருவென முழித்தான்.

”ஹெல்லோ… வாட்ட்? டீலா நோ டீலா?” என கான்ஃபிடண்டாக கேட்டாள்.

30 செகண்டுகள் கழித்து, “டீல். என்ன கண்டிஷன்?” என கேட்டுவிட்டு 20-20 மேட்ச்சின் கடைசி 2 ஓவர் போல இதயம் குதிரையின் ஒட்டம் போல துடித்தது.

ஃப்ரீவேயில் ஓட்டிக் கொண்டிருந்த காரை எக்ஸிட்-டில் வளைத்து ஹோட்டல் செல்லும் பாதையில் வேகத்தைக் குறைத்து ஓட்டினாள். “ரைட்.. நீ கட்டிக்கப் போற பொண்ணை நான் பார்க்கணும்.” என்றாள் பொறுமையாக.

”வாட்ட்ட்ட்ட்ட்… ஆர் யூ க்ரேஸி?”

“யெஸ்.. ஐ’யாம்.. நீ ஒண்ணும் டென்ஷன் ஆக வேணாம். அவகிட்ட நான் பேச மாட்டேன். நீ இண்ட்ரோ கூட கொடுக்கத் தேவை இல்ல.. தூரத்துல இருந்து பார்த்துட்டு, அப்படியே போயிடுறேன். ஒருவேளை நீ இதுக்கு ஒத்துக்கலைன்னா, நான் கல்யாணத்து அன்னைக்கு முன்னாடி வந்து……”

”வெயிட் வெயிட்.. நான் எதுவும் சொல்றதுக்கு முன்னாடியே ஏன் அடுத்த ஆப்ஷனை பத்தி யோசிக்கிற?”

“சரி சொல்லு.. உன்னோட முடிவு என்ன?” திவ்யா பரபரத்தாள். கார் ஹோட்டல் பார்க்கிங் ஏரியாவில் உள்ளே நுழைந்தது. வண்டியை நிறுத்திவிட்டு, லிஃப்ட் அருகில் காத்திருந்தனர். இன்னும் திவ்யா கணேஷ் முகத்தையே ஒரு சிறுகுழந்தை போல பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஓ.கே. நீ பேசலாம், பட், நம்ம விஷயத்தை பத்தி பேசக்கூடாது. ப்ராமிஸ்” என ஜெர்கினில் இருந்து கையை உருவி அவள் முன் நீட்டினான். உடனே குதூகலமாக அவளும் கையை க்ளோவ்ஸில் இருந்து கழற்றி செங்காந்தள் மலர் போல அடர் சிவப்பு ரத்தம் உள்ளங்கையில் ஓட கணேஷ் உள்ளங்கையில் வைத்து பற்றிக் கொள்ள… நான்கு வருடத்திற்கு பின் அதே டச். அதே குச்சி குச்சியான விரல்கள். கணேஷ் அவள் விரல்களுக்குள் தன் விரல்களை அழுத்தும் நேரத்தில், லிஃப்ட் திறக்க வெளியே வந்தாள் சியாமளா. உடனே கைகள் உதறப்பட்டன. பெண்ணுக்கு எதிரி பெண்.. ஆணுக்கும் எதிரி பெண்.

அங்கே இருந்த அசாதாரண சூழ்நிலையை சியாமளா சமாளித்துக் கொண்டு, திவ்யாவை ரூமுக்கு அழைத்து சென்றாள். இரண்டடி தூரத்தில் கணேஷ். உடனே உள்ளே ஒரு ஸ்பார்க் வெடித்தது. “இந்த நிமிடம் வரை திவ்யா எதற்கு ஹோட்டல் வந்திருக்கிறாள்?” என தெரியாததால், அதைப் பற்றி யோசிக்காமல் இருந்ததால் டென்ஷன் ஆனான். அவசரம் அவசரமாக அவர்களை ஃபாலோ பண்ணினான்.

சியாமளா ரூமில் அவர்கள் உள்ளே செல்ல, இவனும் உள்ளே நுழைந்தான். இவன் உள்ளே காலடி வைத்த நொடியில், அவன் கண்கள் குருடானது. உள்ளே இருந்த அணைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டன. கேண்டிலின் மெல்லிய வெளிச்சம் ஹாலின் நடுவே எரிய ஆரம்பிக்க, சுற்றியும் 8 பேர் சீராக கைதட்டிக் கொண்டிருக்க, லேப்டாப் ஸ்பீக்கரில், “ஹேப்பி பர்த்டே டூ யூ.. ஹேப்பி பர்த்டே டூ யூ.. “ என சின்னக் குழந்தை பாட அடுத்த வரியை, எல்லாரும் சேர்ந்து மொத்தமாக, “ஹேப்ப்பி பர்த்டே டூ கணேஷ்ஷ்ஷ்ஷ்ஷ்” என முடிக்க, கணேஷ் பர்த்டே கேக் அருகில் வர ஃபோம் ஸ்ப்ரே டப் என ரெண்டு பக்கம் இருந்து அடிக்கப்பட்டது, மேலே இருந்து ஜிகினா பேப்பர் கட்ஸ் கொட்டப்பட அனைத்து விளக்குகளும் எரிந்தன. காலேஜ் ஃபைனல் இயர் பர்த்டே செலிப்ரேஷனுக்கு அப்புறம், கணேஷ் இப்படி க்ராண்ட்டா கொண்டாடும் பர்த்டே இது. கணேஷ், எல்லாருக்கும் தேங்க்ஸ் சொல்லிவிட்டு கேக் கட் பண்ணினான். கட் பண்ணிய முதல் பீஸை சியாமளா முன்னே வந்து கணேஷுக்கு ஊட்ட, திரும்ப கணேஷ் சியாமளாவுக்கு ஊட்ட, திவ்யா காதுகளில் இருந்து புகை வர ஆரம்பித்தது.

கணேஷ் எல்லாருக்கும் கேக் கொடுத்துவிட்டு திவ்யா அருகில் வந்து நின்றான். “நீ கூட மறந்துட்ட. பாரு, சியாமளா எப்படி அரேஞ்ச் பண்ணி இருக்கான்னு?” என பெருமையாக சொன்னான். “இப்ப எதுக்கு தேவையில்லாம என்ன அவ கூட கம்பேர் பண்ற?” என கடித்தாள். அப்போது தான் ஆர்வமிகுதியில் கணேஷ் செய்த முட்டாள்தனம் உறைத்தது. நாக்கைக் கடித்துக் கொண்டான்.

“ஓ.கே ஃப்ரண்ட்ஸ். உங்க எல்லாரையும் நான் இன்வைட் பண்றதுக்கு கணேஷ் பர்த்டே மட்டும் காரணம் இல்ல” வேண்டுமென்றே கொஞ்சம் இடைவெளி விட்டாள். எல்லாரும் ஆச்சர்யமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். கணேஷ்க்கு தலைக்குள் லைட்டாக மணி அடித்தது.

“ஆல்ரைட். என்னோட மேரேஜ் இன்விடேஷன் கொடுக்கறதுக்கும் தான்” என அவள் சொல்லி முடிக்க அங்கே இருந்த அனைவரும் திவ்யா உள்பட கைதட்டி “கங்கிராட்ஸ்” என கத்தினர். ”என்னோட வுட் பி-க்காக நான் ஒரு ரிங் கூட வாங்கி இருக்கேன்” என எடுத்துக் காட்டினாள். கூட்டம் ‘வாவ்’ என வாயை பிளந்தது.

“ஓ.கே. அவர் யாருன்னு உங்களுக்கு தெரியுமா?” கைதட்டல் அமைதியானது. இரண்டு ஸ்டெப்ஸ் முன்னால் நடந்து வந்தாள்.

திவ்யாவிற்கு அருகில் நின்றிருந்த கணேஷ் முன் மண்டியிட்டு, ”ஐ லவ் யூ பேபி” என கையை விரித்து சொல்லிவிட்டு, மோதிரத்திற்காக கணேஷின் வலதுகையைக் கேட்டாள். கணேஷ்க்கு உற்சாகம் பியர் பாட்டில் போல் பொத்துக் கொண்டு வந்தது. ஆனாலும் பொறுமையாக அவள் செய்வதை ரசித்துக் கொண்டே அவளுக்காக வலதுகையைக் கொடுக்க, அவள் மோதிரம் போட, கூட்டத்தினர் கைதட்டி கூச்சல் போட்டனர். அவள் முடித்ததும், கணேஷ் அவள் தோள்களைப் பற்றி தூக்கி சியாமளாவைக் கட்டி பிடித்து சுற்றினான். இன்னும் கூட்டம் ரசித்தது. “தேங்க்ஸ் ஹனீ” என சியாமளா முகத்தருகில் சொல்லிவிட்டு நிமிர்ந்தான். நிமிர்ந்தால் திவ்யாவின் கண்களில் கண்ணீர் தேங்கி இருந்தது. கணேஷ், “ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்” என கெஞ்சினான். எதுவும் தப்பாக நடந்துவிடக் கூடாது என வேண்டிக் கொண்டான்.

சியாமளா அவனை விட்டு விலகி, ஊரில் இருந்து வந்த இன்விடேஷனை எல்லாருக்கும் கொடுக்க ஆரம்பித்தாள். திவ்யாவிற்கு கொடுக்க அருகில் வந்த போது, திவ்யா சியாமளாவை கட்டிப்பிடித்தாள். “கங்கிராட்ஸ். க்ரேட் ச்சாய்ஸ்” என உடைந்த குரலில், உற்சாகம் போர்த்தி விஷ் பண்ணினாள். “கங்கிராட்ஸ் கணேஷ்” என கணேஷுக்கும் ஃபார்மலாக விஷ் பண்ணிவிட்டு பார்ட்டியை விட்டு விலகி ஓடினாள். யாரும் அதை கவனிக்கவில்லை, கணேஷைத் தவிர.

வெள்ளிக்கிழமை. 10.45AM. லண்டன் ஏர்போர்ட்.

எல்லா ஃபார்மலிட்டிகளையும் முடித்துவிட்டு, ஃப்ளைட்டில் உள்ளே சென்றனர். சீட்டில் உட்கார்ந்து கொண்டனர். “எப்பவும் நான் கெளம்பும்போது க்ளையண்ட் ஆஃபிஸிலிருந்து வருவாங்க. இந்தவாட்டி யாரையும் காணோம்?” என ப்ச் கொட்டினாள் சியாமளா.

“ஓ.. அப்படியா.. யாரு யூஷுவலா வருவா?” கணேஷ்

“திவ்யா. நேத்து பார்ட்டில கூட ரொம்ப மூட் ஆஃப்பா இருந்தா. ரைட், அவளைப் பத்தி பேசி என்ன ப்ரயோஜனம்?” கல்யாணம் ச்சும்மா அதிரணும் கணேஷ். என்னோட ரொம்ப நாள் கனவு. நல்லா க்ராண்ட்டா பண்ணனும்ன்னு” என ஆசைகளை விரித்தாள் சியாமளா.

“ம்ம்ம்.. பர்த்டே பார்ட்டிலயே இப்படி க்ராண்ட்டா announce பண்ணுவேன்னும் நான் எதிர்பார்க்கல.” என்றான்.

“ம்ம். ஆமா அது தான் என் ஸ்பெஷல். ஹேய்.. அங்க உனக்கு ஒரு கிஃப்ட் வந்திச்சி.. இந்தா” என ஒரு பார்ஸலை நீட்டினாள் சியாமளா.

என்ன என யோசித்துக் கொண்டே பிரித்தான். உள்ளே திவ்யா ப்ரசண்ட் பண்ண கணேஷ்-திவ்யா காலேஜ் ஃபோட்டோ. ஒரே செகண்டில் மொத்த சந்தோஷமும் ஃபில்டர் ஆகி சியாமளா முகத்தைப் பார்த்தான்.

“எல்லாம் தெரியும்….” கொஞ்சம் இடைவெளி விட்டு, “இதுவும் என் ஸ்பெஷல்” என 0.0001% கூட குறையாத அதே காதலின் கிறக்கத்துடன் கண்ணடித்தாள் சியாமளா. கணேஷ் அவள் தோள்களை பிடித்து வாஞ்சையாக அணைத்துக் கொள்ள

காதல் ஃப்ளைட் சேஃபாக டேக் ஆஃப் ஆனது.

(முற்றும்)

*************************************

Related Posts with Thumbnails