சியாமளா-13: அதிகாலையில் லண்டன் ஏர்போர்ட்!

கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

இரண்டு பேரும் திரும்ப சென்னை வந்துவிட்டனர். நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை இரவு விமான பயணம். கணேஷும் சியாமளாவும் அநியாயத்திற்கு ஷாப்பிங் பண்ணினார்கள். ஒரு மாதம் தங்க போவதற்கு, கல்யாணத்திற்கு ஷாப்பிங் பண்ணுவது போல் எக்கசக்கமாக வாங்கி குவித்தார்கள். 10 ரெடிமேட் ஷோரூம்ஸ், வுட்லேண்ட், அம்பிகா அப்பளம், டி,நகர் நல்லி சில்க்ஸில் பட்டுபுடவை என கடை கடையாய் ஏறி இறங்கி பர்ச்சேஸ் பெரிய அளவில் நீண்டது. "ஆன்சைட் போறதுக்கு எதுக்கு பட்டுப்புடவை?" எனவும் கணேஷ் சண்டை போட்டதில், சியாமளாவே ஜெயித்தாள். அதில் அவர்கள் போகாத ஒரே இடம், ஜூவல்லரி ஷாப்.
அங்கேயும் கணேஷ் மட்டும் தனியாக போய் சியாமளாவுக்காக ஒரு ரிங் வாங்கியிருந்தான், ஆன்சைட்டில் தனியாக இருக்கும்போது கொடுப்பதற்காக.

ஞாயிற்றுக்கிழமை காலையில் ஊரில் இருந்து இருவரும் பெற்றோரும் வந்துவிட்டனர். கணேஷ் வீட்டில்

"எனக்கு என்னமோ உங்க ரெண்டு பேரையும் ஒண்ணா அனுப்புறது சரியாப் படலை?" அம்மா ஆரம்பித்தார்.

"ஏன்மா? கடைசி நேரத்துல குட்டைய குழப்புறீங்க?"

"ரெண்டு பேரும் தனிதனியா போனாக் கூட இந்த அளவுக்கு வருத்தப்பட மாட்டேன்? ஆனா இது தான் என்னைய ஏதேதோ யோசிக்க வைக்குது?"

"அதான் ஏன்? நீங்க நினைக்குற மாதிரி இல்லமா.. இந்த பொண்ணு நல்ல பொண்ணு. பொண்ணு பாக்க போற அன்னைக்கு சொன்னத, நான் வாபஸ் வாங்கிக்குறேன்"

"உனக்கு வேணும்னா நான் வேற பொண்ண பார்த்து கட்டி வைக்குறோம். இந்த பொண்ணு வேணாம்?"

"இது என்ன புதுகதை? ஃபர்ஸ்ட் நான் வேணாம்ன்னு சொன்னேன், நீங்க வேணும்ன்னு சொன்னீங்க. இப்ப நீங்களே வேணாம்ன்னு சொல்றீங்க?. இதெல்லாம் ஓவர். எங்களுக்கு உள்ள நல்ல அண்டர்ஸ்டேண்டிங் இருக்கு. ஒண்ணா கோவிலுக்கு போனோம், அந்த பொண்ணு கூட தான் நான் ஒண்ணா ஊருக்கு வந்தேன். அம்மா.. சியாமளா ரொம்ப நல்ல பொண்ணும்மா. ஏதாவது சொல்லி கலைச்சி விட்றாதீங்க, ப்ளீஸ்ஸ்ஸ்?"

"அந்த பொண்ணு நல்ல பொண்ணு தான். அதுல எனக்கு சந்தேகமே இல்ல? ஆனா...."

"அப்புறம்? அம்மா, திஸ் இஸ் டூ மச். உங்க‌ பையனையே சந்தேகப்படுறது நல்லா இல்ல‌. போன வாட்டி மாதிரி நான் தம், தண்ணி எல்லாம் அடிக்க மாட்டேன். இது உங்க மேல சத்தியம்?"

"டேய், நீ என்ன லூஸா? நான் என்ன சொல்ல வர்றேன்னு உனக்கு புரியவே இல்லையா? ஏங்க நீங்களாவது சொல்லுங்க"

கணேஷ் அப்பா "ஹா ஹா.. விடு நீ நெனைக்குற மாதிரி எல்லாம் ஒண்ணும் ஆகாது. என்ஜாய் பண்ணட்டும். ஒரு மாசம் தான.. வந்தவுடனே கல்யாணத்த முடிச்சிடுவோம்"

கணேஷ், அவர்கள் இருவரையும் மனதிற்குள் திட்டிக் கொண்டு, வெளியே போய்விட்டான்.

இரவு 10 மணி. அண்ணா பன்னாட்டு விமான நிலையம். இரண்டு பேருடைய பெற்றோரும் வந்திருந்தனர். சியாமளாவின் அம்மா, கணேஷ தனியாக அழைத்து ஏகத்திற்கும் அட்வைஸ் மழை பொழிந்தார்.கணேஷ் அப்போது தான் கவனித்தான், "காலையில் அம்மாவின் கண்களில் கண்ட அதே குழப்பம், சியாமளாவின் அம்மா கண்களில் கண்கூடாக தெரிந்தது"

ஒருவழியாக ட்ராலியைத் தள்ளிக் கொண்டு, போர்டிங் பாஸ் வாங்க உள்ளே சென்றுவிட்டனர். எமிக்ரேஷன் க்ளீயரன்ஸ், செக் இன் எல்லாம் முடிந்து, ஃப்ளைட்டுக்காக காத்திருக்க உட்காரும்போது தான், இருவர் முகத்தில் 2000 வாட்ஸ் பல்ப் பிரகாசம்.

"என்ன சொன்னாங்க உங்க வீட்ல? அங்கேயும் லா லா லான்னு விக்ரமன் படம் ஓடுச்சா?" கணேஷ் ஆரம்பித்தான்.

"ஆமா.. தாங்க முடியல.. நானும் இதுவரைக்கும் ரெண்டு மூணு தடவ போயிருக்கேன். அப்பல்லாம் இப்பிடி ஃபீல் பண்ணதில்ல. இப்ப மட்டும் ஏன்னு தெரியல. ஒருவேள இப்ப நான் கல்யாண பொண்ணுல்ல. அதான் ஓவர் அக்கறைன்னு நினைக்கிறேன்" கண்ணடித்தாள்

"ம்ம்ம். உன்கிட்ட ரொம்ப நாளா கேட்கணும்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன். நீ ஏன் அடிக்கடி கண்ணடிக்கிற?"

"அதெல்லாம் ச்சும்மா" என சொல்லிக் கொண்டே மறுபடியும் கண்ணடித்தாள்.

"ஓ..நான் கூட உன் கண்ணுல தான் ஏதோ ப்ராப்ளம்ன்னு நெனச்சேன்?"

"நோ நோ.. யார்கிட்ட பேசும்போதும் இப்படி எல்லாம் பண்றதில்ல. இது கணேஷ் ஸ்பெஷல்" மறுபடியும் கண்ணடித்தாள்.

டைம் ஆகவே,ஜெட் ஏர்வேய்ஸ் அறிவிப்பு வந்தது. இருவரும் லேப்டாப் பேக்கை மட்டும் தூக்கிக் கொண்டு ஃப்ளைட் உள்ளே சென்றனர்.

கணேஷ் கார்னர் சீட்டில் உட்கார்ந்து கொள்ள, சியாமளா பக்கத்து சீட்டில் உட்கார்ந்தாள். ஃப்ளைட் பறக்க ஆரம்பித்தது. ரன்வேயில் இருந்து எகிறிக் குதித்து பறக்க ஆரம்பிக்கும் போது, டாப் ஆங்கிளில் கத்திப்பாரா பாலம், லைட்டில் மின்னும் மௌண்ட் ரோட், மெரீனா பீச் தாண்டி 45 டிகிரி டில்ட் ஆகி பறக்கும் வரை வெளியே பார்த்துக் கொண்டிருந்தவன், சியாமளா பக்கம் திரும்பி பேச ஆரம்பித்தான்.

"எவ்வளவு நேரம் ஜர்னி டைம்?"

"9 ஹவர்ஸ் ஆகும். ஏற்கெனவே போன இடம் தான். போர். திரும்ப போகுறதுக்கே இன்ட்ரஸ்ட் இல்ல. ஆனா கூட நீ வர்றல்ல. ஸோ, சம்திங் இன்ட்ரெஸ்டிங்"

"ஓ.. அப்படியா.. இப்ப ஏன் கண்ணடிக்கல?"

"நீ தான் கலாய்க்கிறீயே. ஸோ, இனிமே கெடையாது"

"நோ நோ கலாய்க்கல.. டவுட் க்ளீயர் பண்ணிக்கிட்டேன். ஆக்சுவலி, நீ அப்படி பண்றது ரொம்ப ரொமான்டிக்கா இருக்கு"

"அங்க தான் இருக்கு உல்லன் டவல். எடுத்து தொடைச்சுக்கோ. ஜொள்ளு ரொம்ப வழியுது"

அசடு வழிந்தான் கணேஷ்.

ஏர்ஹோஸ்டஸ் ஃபுட் ட்ராலியை தள்ளிக் கொண்டு வந்து கொடுக்க ஆரம்பித்தாள். கணேஷ் சியாமளா இடத்தை நெருங்கி, "ட்ரிங்க்ஸ் வேண்டுமா?" எனக் கேட்டாள்.

"Yes.. Budweiser பீர் ஒன்" என வழக்கமாக குடிப்பதை சொல்லிவிட்டு பின் சியாமளா அருகில் இருப்பது உறைத்து நாக்கைக் கடித்தான். உஷ்ணமாக முறைத்தாள், பின்

"டூ" என சொன்னாள் சியாமளா.

"அடிப்பாவி நீயும் அடிப்பியா?"

மறுபடியும் முறைத்தாள், "நீயே குடி" என கடுப்புடன் கணேஷிடம் கொடுத்தாள்.

"வெரி குட்" என வாங்கிக் கொண்டு வெட்கமே இல்லாமல் ரெண்டு மினி பீரையும் குடித்தான். சாப்பிட்டு முடித்துவிட்டனர். ஆஃப் சிக்நேச்சரையே தலைகீழாக கவிழ்ப்பவனுக்கு, இது எறும்பு கடிக்கும் அளவுக்கு கூட போதை ஏறவில்லை.

"ஏர்போர்ட்ல ரிசீவ் பண்றதுக்கு யாரும் வருவாங்களா?" தெளிவாகவே கேட்டான்.

"ம்ம், வருவாங்க. ரெகுலரா லாஜிஸ்டிக் டீம்ல இருந்து வருவாங்க. பட், இன்னைக்கு அங்க இருக்கிற ஒரு லேடி வர்றதா சொன்னாங்க" ரொம்ப கேஷுவலாகவே சொன்னாள். துளி கோபம் கூட இல்லை.

இப்படியே 1 மணிநேரத்திற்கும் மேலாக பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் தூங்கிவிட்டனர். லண்டன் நகரமே இன்னும் விடியவில்லை. அதிகாலை 4.30 மணி. ஃப்ளைட் லேண்ட் ஆனது. இருவருக்கும் தூக்க கலக்கம் துளியும் இல்லை. ஆனால் குளிர் பின்னிக் கொண்டிருந்தது. லக்கேஜ் கலெக்ட் பண்ணிக் கொண்டு, வெளியே வரும்போது ஏகப்பட்ட பேர் கையில் போர்டுடன் காத்துக் கொண்டிருந்தனர். கணேஷ், தங்களின் பெயரை தேடிக் கொண்டிருந்தான். யாரிடமும் இல்லை.

சியாமளாவிடம் கேட்டான். "அவங்களுக்கு என்ன நல்லா தெரியும். அதனால வச்சிருக்க மாட்டாங்க. வெயிட் தேடிப் பார்க்கலாம்" என்றாள். அங்கே இருந்த எல்லா வெள்ளைக்காரிகளின் முகத்தையும் ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

நீளமான குளிர் ஜாக்கெட், கையில் க்ளோவ்ஸ் அணிந்து கொண்ட போனி டெயில் லேடியை தொட்டு திருப்பினாள் சியாமளா. திரும்பினாள்.

"ஹாய்" என சொல்லிக் கொண்டே இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டனர்.

"இது தான் கணேஷ்!" என கணேஷ்க்கு இன்ட்ரோ கொடுக்க சியாமளா திரும்பினாள். அவன் இல்லை. 50 மீட்டர் தொலைவிலேயே பேய‌றைந்தது போல் அதிர்ச்சியில் உறைந்திருந்தான் கணேஷ்.

அந்த போனிடெயில் லேடி ஆவலுடன், "யார்?" என எட்டிப் பார்த்தாள். ஆச்சர்யத்தில் திவ்யாவின் கண்கள் விரிந்தன.

******************************

13 comments:

Maayavan said...

கலக்கலா இருக்கு..

குட்டி said...

அழுகிற பொண்ணுகளுக்கு மத்தியில் , இந்த பெண்ணின் உணர்வுகள் (கோபம், சந்தோசம்) எனக்கு சற்று வித்தியாசமாக தெரிகின்றது . இது மாதிரி பெண்களைத்தான் நான் தேடுகிறேன்.
வாழ்க்கை வாழ்வதற்கே.....!
எதிலும் துணிச்சல் தேவை.
"வாழ்த்துக்கள்"

Shankar said...

Nice da! Keep going on! :)

கணேஷ் said...

நன்றீ Maayavan!

ந‌ன்றி குட்டி!
அழுகிற பொண்ணுகளுக்கு மத்தியில் , இந்த பெண்ணின் உணர்வுகள் (கோபம், சந்தோசம்) எனக்கு சற்று வித்தியாசமாக தெரிகின்றது . இது மாதிரி பெண்களைத்தான் நான் தேடுகிறேன்.//

சீக்கிர‌மாக‌வே இதே போல் பெண் கிடைக்க‌ வாழ்த்துக்க‌ள்!

வாழ்க்கை வாழ்வதற்கே.....!
எதிலும் துணிச்சல் தேவை.
"வாழ்த்துக்கள்"//

எல்லாம் ஓ.கே. எதுக்கு க‌டைசியில் வாழ்த்துக்க‌ள்? :)

*****************

ந‌ன்றீ Shankar!

Nice da! Keep going on! :)//

:)

*****************

☀நான் ஆதவன்☀ said...

அட்ராசக்கை அட்ராசக்கை :)

அடுத்த வாரம் என்ன நடக்கும்னு எதிர்பார்க்க வச்சுட்டீங்க கணேஷ் :)

//அழுகிற பொண்ணுகளுக்கு மத்தியில் , இந்த பெண்ணின் உணர்வுகள் (கோபம், சந்தோசம்) எனக்கு சற்று வித்தியாசமாக தெரிகின்றது . இது மாதிரி பெண்களைத்தான் நான் தேடுகிறேன்.//

எதுக்கும் இவரை உசாரா இருக்கச்சொல்லுங்க..... சியாமளா பின்னூட்டம் போடுற இடம். அப்புறம் சியாமளா கை நீட்டினாலும் நீட்டுவாங்க :))

துபாய் ராஜா said...

கணேஷ், இன்றைய தலைமுறை வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் அழகா கதையை கொண்டு போறீங்க.

தொடரின் எல்லா பாகமும் படித்தேன். நன்றாக உள்ளது. அனைத்து ட்விஸ்ட்டுகளும் அருமை.

ஊர்ல போய் ரெண்டு நாள் இருந்ததையெல்லாம் எழுதாம இருக்கிறதைப் பார்த்தா அதைவிட ஏதோ பெரிய விஷயம் நடக்கப்போறாப்பல இருக்கு.

அப்படியே அடிச்சு ஆடுங்க.

வாழ்த்துக்கள்.

ஊர்சுற்றி said...

வழக்கமா - முன்னாடி எபிசோட்ல குடுத்த அந்த பொண்ணு இங்கிட்டு வரணுமேன்னு நினைச்சேன். வந்திட்டாங்க. சரி. இனி என்ன நடக்குதுன்னு பார்க்கலாம். :)

Anonymous said...

//பேய‌றைந்தது போல் அதிர்ச்சியில் உறைந்திருந்தான் கணேஷ்.//

இது நான் எதிர்பார்த்ததுதான். :)

puduvaisiva said...

நல்ல டுவிஸ்ட்

லேண்ட் ஆனது விமானம் மட்டும் இல்லை கணேஷ்
பாழபோன பழைய காதலும்தான்

உன் குத்தமா என் குத்தமா
இந்த ஏர்போட்டில் யாரை குத்தம் சொல்ல ....

Anonymous said...

Nice Story...Keep It Up... Mr. Ganesh.

Cable சங்கர் said...

rompa naal kazhichu twist vanthirukku..

நாடோடிப் பையன் said...

Nice suspense. Keep it up, buddy.

கணேஷ் said...

Thanks Cable Sankar, நாடோடிப் பையன்!

Related Posts with Thumbnails