சியாமளா-10: திவி (அ) திவ்யா ப்ரியதர்ஷினி!

கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10

அடுத்த நாள், வியாழக்கிழமை. சீக்கிரம் ஆஃபிஸில் இருந்து வந்தவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. டூவீலரை எடுத்துக் கொண்டு, நேராக திருவான்மியூர் ஆர்.டி.ஓ ஆஃபிஸ் அருகே உள்ள முத்துவேல் வீட்டிற்கு வந்தான்.

"என்ன நீயா?" செயற்கையாக ஷாக்காகி போனது போல் நடித்தான். வீட்டை விட்டு கொஞ்சம் வெளியே வந்து இவன் தனியாகத் தான் வந்தான் என உறுதி செய்துகொண்டான்.

"நானே தான். ரொம்ப போர் அடிக்குது. பீச் போகலாமா?"

"வந்துட்ட. வேற வழி?" என புலம்பிக் கொண்டே இருவரும் பீச் கெளம்பினர்.

பீச்சில் வண்டியை பார்க் செய்துவிட்டு, கடலின் அலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது முத்துவேல்,

"த‌ம் அடிக்கிறீயா?"

"இல்ல‌. என‌க்கு வேணாம்"

"மேரேஜ் ஃபிக்ஸ் ஆன‌துல‌ இருந்து நீயும் ஒரு ரேஞ்சா தான் இருக்க‌. என‌க்கு நேர‌ம் வ‌ரும்டா. சியாமளா டார்ச்ச‌ர் தாங்க‌ முடியாம‌ த‌ண்ணி அடிக்க‌ நீ என்ன‌ கூப்பிடுவேல்ல‌, அப்ப‌ வ‌ச்சிக்குறேன்"

"முத்து, நீ இங்கேயே இரு. நான் போய் சோன் ப‌ப்ப‌டி, கார்ன் ஏதாவ‌து கொறிக்கிறதுக்கு வாங்கிட்டு வ‌ரேன்"

வ‌றுத்த‌ க‌ட‌லை வாங்கிக் கொண்டிருந்தான். திரும்பும்போது, பார்க்கிங் ஏரியாவில் ஒருவ‌ன் உள்ளே வ‌ண்டியைத் திருப்பிக் கொண்டிருந்த‌ போது, அதை க‌வ‌னிக்காம‌ல் க‌ணேஷ் குறுக்கே வ‌ந்த‌தும், ச‌ட‌ன் ப்ரேக் அடித்தான்.

"டேய்.. " என அவன் அசிங்க‌மாக‌ திட்ட‌ ஆர‌ம்பிக்க‌ போகும்போது ந‌டுவே இடைவெளிவிட்டு, ஹெல்மெட் க‌ண்ணாடியை தூக்கிவிட்டுக் கொண்டு, "க‌ணேஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்... " என‌ முடித்தான்.

க‌ணேஷுக்கு யார் என‌த் தெரிய‌வில்லை. முக‌த்தில் ஆச்ச‌ர்ய‌ ரேகைக‌ள் ப‌ர‌விக் கொண்ட‌து. அவ‌ன் பின்னால் வேற‌ ஒரு ஃபிக‌ர் இருந்தாள்.

"டேய், நான் தான் தினேஷ்" என‌ அவ‌ன் சொல்வ‌த‌ற்கும், ஹெல்மெட்டை கழற்றிய‌ நேர‌த்திற்கும் ச‌ரியாக‌ இருந்தது.

க‌ணேஷுக்கு ஆச்ச‌ர்ய‌ம். நான்கு வ‌ருட‌ பொறியிய‌ல் க‌ல்லூரி வாழ்க்கையில் கிடைத்த நிறைய ஃப்ரெண்ட்ஸில் ஒருவன். க‌ல்லூரி முடிந்து நான்கு வ‌ருட‌த்திற்கு அப்புற‌ம் இப்போது தான் பார்க்கிறான்.

"தினேஷ், எப்ப‌டி இருக்க‌?"

"ஃபைன்டா. நீ எப்ப‌டி இங்க‌? நீ யு.எஸ் போயிட்ட‌தா கேள்விப்ப‌ட்டேன்"

"யெஸ், ப‌ட் நான் த்ரீ ம‌ன்த்ஸ் முன்னாடியே வ‌ந்துட்டேன். இங்க‌ தான் என் ஃப்ரெண்ட் வீடு இருக்கு. அப்ப‌டியே சும்மா வாக் வ‌ந்தோம். உன‌க்கு க‌ல்யாண‌ம்ன்னு கேள்விப்ப‌ட்டேன்"

"ஆமான்டா. இவ‌ தான்" என‌ பின்னால் இருந்த‌வ‌ளுக்கு இன்ட்ரோ கொடுத்தான். மொபைல் ந‌ம்ப‌ர் மாற்றிக் கொண்ட‌ன‌ர்.

"க‌ண்டிப்பா க‌ல்யாண‌த்துக்கு வ‌ந்திட‌ணும்."

"ஓ.கேடா, ஷ்யூர்" என கணேஷ் சொல்லிக் கொண்டிருந்த‌போதே தினேஷ் அவ‌ன் க‌ண்க‌ளை ஒரு வித‌ த‌ய‌க்க‌த்துட‌ன் பார்த்துக் கொண்டிருந்தான்.

"திவ்யா, எப்ப‌டிடா இருக்கா?"

மொபைலில் அவ‌ன் ந‌ம்ப‌ரை ஸ்டோர் ப‌ண்ணிக் கொண்டிருந்த‌வ‌ன், ச‌ரியாக‌ க‌வ‌னிக்க‌வில்லை, "எந்த‌ திவ்யா?"

"திவ்யாடா, திவ்யா ப்ரிய‌த‌ர்ஷினி. ம‌ற‌ந்துட்டீயா?"

லேசாக‌ அதிர்ச்சியானான். ம‌ன‌தினுள், "கிருஷ்ணகிரி, பர்கூர், க‌வ‌ர்ன்மென்ட் இன்ஜியனிய‌ரிங் காலேஜ், கேன்டீன், ப்ராக்டிக‌ல் லேப், ஹாஸ்ட‌ல், தியேட்ட‌ர், கோவில்" எல்லாம் ஃப்ளாஷ் அடித்துக் கொண்டிருந்த‌து.

கணேஷின் தோள்க‌ளைப் பிடித்து லைட்டாக‌ உலுக்கினான் தினேஷ்.

"இல்ல‌டா. தெரியல‌. ரொம்ப‌ நாளா கான்டாக்ட்ல‌ இல்ல‌"

"ம்ம்.. ரொம்ப நாள் முன்னாடி, என‌க்கு இமெயில் அனுப்பி இருந்தா. ஃபாரின்ல ஹையர் ஸடடீஸ் பண்ணிக்கிட்டு இருக்கிறதா சொல்லி இருந்தாள். உன்ன‌ ப‌த்தியும் கேட்டிருந்தா. உன் கார்ப்பரேட் இமெயில் ஐடியும் அனுப்பி இருந்தேன். நீங்க‌ அதுக்க‌ப்புற‌ம் கான்டாக்ட்ல‌ தான் இருப்பீங்க‌ன்னு நென‌ச்சேன். ஸாரி"

"இட்ஸ் ஓகே"

"ஓ.கேடா. நாங்க‌ கெள‌ம்புறோம்"

முத்துவேலுட‌ன் கொஞ்ச‌ நேர‌ம் பீச்சில் இருந்துவிட்டு, நேராக‌ வீட்டுக்கு வ‌ந்துவிட்டான். அவ‌ச‌ர‌ம் அவ‌ச‌ர‌மாக‌ த‌ன்னுடைய‌ பெரிய‌ சூட்கேஸைத் திற‌ந்தான். எல்லாத் துணிக‌ளையும் வெளியில் எடுத்து அடியில் இருந்த‌ ஆட்டோகிராஃப் நோட்டை எடுத்தான்.

திவ்யா எழுதிக் கொடுத்த‌ ப‌க்க‌த்திற்கு வ‌ந்தான்.

"லைஃபில் எதையும் மிஸ்
ப‌ண்ண‌க்கூடாது என‌ நினைத்த‌தில்லை,
உன்னுட‌ன் ப‌ழ‌கும் வ‌ரை!"
-Divi

என‌ ஆங்கில‌த்தில் எழுத‌ப்ப‌ட்டிருந்த‌து.

அந்த‌ ப‌க்க‌த்தின் ந‌டுவே முக‌த்தை வைத்து முக‌ர்ந்தான். ப‌ழைய‌ நாட்க‌ள் க‌ண்முன்னே ஓடிக் கொண்டிருந்த‌து, க‌ணேஷ் க‌ண்க‌ளில் இர‌ண்டு துளி க‌ண்ணீர்

*****************************************************

28 comments:

சியாமளா said...

கணேஷ் , இதோ பூரிக்கட்டை எடுத்துட்டு உங்க வீட்டுக்கு வந்துக்கிட்டே இருக்கேன்.

☀நான் ஆதவன்☀ said...

ரைட்டு...ஏற்கனவே, சியாமளா, ஷாலினி பின்னூட்டம் வந்ததது பத்தாதுன்னு திவ்யாவோட பின்னூட்டம் வேற வரனுமா?அவ்வ்வ்வ்

அப்ப ஃபாரின்ல ரெண்டு கதாநாயகிகள் ஒரு கதாநாயகனா? கலக்குங்க.

அப்புறம் ஒரு மேட்டரு. திடீர்னு திடீர்னு கதைக்கு ரொம்ப முக்கியமான கேரக்டரை நுழைக்க வேணாம். யாரா இருந்தாலும் முன்னாடியே ஒரு சின்ன இண்ட்ரோ கொடுத்திடுங்க :)

☀நான் ஆதவன்☀ said...

//சியாமளா said...

கணேஷ் , இதோ பூரிக்கட்டை எடுத்துட்டு உங்க வீட்டுக்கு வந்துக்கிட்டே இருக்கேன்.//

எந்த சண்டையா இருந்தாலும் பப்ளிக்கா தான் நடக்கனும் அதுவும் பின்னூட்டம் வாயிலாக. நாங்கல்லாம் இருக்கோம்ல :) எங்களுக்கு எப்படி தெரியுறதாம் :)

sathishsangkavi.blogspot.com said...

ரொம்ப பீல் பண்ணி எழுதியிருப்பீங்க போல.............

லெமூரியன்... said...

இது என்ன புதுசா?? முடியல கணேசு...மன்மதனாபா நீ?? :-) :-)

Anonymous said...

//லெமூரியன்... said...

இது என்ன புதுசா?? முடியல கணேசு...மன்மதனாபா நீ?? :-) :-)//

அதானே. இப்படியே வளத்துட்டு இருந்தா, ஷாலினி, ஹரிணி, சியாமளா, திவ்யான்னு எத்தனை பேருக்குதான் நாங்க சப்போர்ட் பண்ணறது.

மணி said...

என்ன புது கேரக்டர் அந்த பேருலயும் யாரும் பின்னூட்டம் போடுவீங்களா?

Shankar said...

Ganesh nalla twist da.

இது என்ன புதுசா?? முடியல கணேசு...மன்மதனாபா நீ?? :-) :-)

- Mr. லெமூரியன்! Ganesh baashai la sollanumna, Tamil nadu la ganesha paathu epadi keta mudhal aal neenga than!!!

சத்ரியன் said...

//"எந்த‌ திவ்யா?"//

கணேஷ்,

அப்படின்னா எத்தன? இனிஷியலோட சொன்னாதான் ஞாபகம் வருமோ?

அது யாரு சியாமலா-'ன்னு .அய்யோ பூரி கட்டயோடவா? நான் இல்ல ஆளை விடுங்கோ.......! GGGGGGoooooooooo...!

Nisha said...

ithu ganesh :)

intha twist thaane enna maathiri blog arivu illaathavangala kooda comment poda vachchathu. :)

aana, twist kodukurathulayum oru niyaayam venaama ganesh..??

ungalukku therinja oru ponnoda name a kooda vittu vaikka maateenga polirukku?

are u a simbu fan? :P

Allah, enna kaappaaththu... :P

Cable சங்கர் said...

innnum.. innum etirparkiren

SS said...

super twist. Nalla eluthararinga

சரவணகுமரன் said...

பாஸ், கதையை காமெடியா கொண்டு போங்க...

கணேஷ் said...

நன்றி சியாமளா!

கணேஷ் , இதோ பூரிக்கட்டை எடுத்துட்டு உங்க வீட்டுக்கு வந்துக்கிட்டே இருக்கேன்//

பூரிக்க‌ட்டை என்ன‌ எது வேணும்னாலும் எடுத்திட்டு வாங்க‌, ஆனா வேற‌ பேரோட‌ வாங்க‌ ஷாலினி :)

**************************

நன்றி ☀நான் ஆதவன்☀

ரைட்டு...ஏற்கனவே, சியாமளா, ஷாலினி பின்னூட்டம் வந்ததது பத்தாதுன்னு திவ்யாவோட பின்னூட்டம் வேற வரனுமா?அவ்வ்வ்வ்//

இந்த‌ க‌மெண்ட் தான் நான் உங்க‌கிட்ட‌ எதிர்பார்த்தேன் :)

அப்ப ஃபாரின்ல ரெண்டு கதாநாயகிகள் ஒரு கதாநாயகனா? கலக்குங்க. //

ஓ.. அப்ப‌டியா.. இன்டெர்வெல்ல பேசிக்கிட்டு இருக்கிற‌ க‌தை, ஒரிஜின‌ல் க‌தை ஆகிடுமா? :)

அப்புறம் ஒரு மேட்டரு. திடீர்னு திடீர்னு கதைக்கு ரொம்ப முக்கியமான கேரக்டரை நுழைக்க வேணாம். யாரா இருந்தாலும் முன்னாடியே ஒரு சின்ன இண்ட்ரோ கொடுத்திடுங்க :)//

பாஸ், உங்க‌ள் உள்குத்தை ர‌சித்தேன் :)

எந்த சண்டையா இருந்தாலும் பப்ளிக்கா தான் நடக்கனும் அதுவும் பின்னூட்டம் வாயிலாக. நாங்கல்லாம் இருக்கோம்ல :) எங்களுக்கு எப்படி தெரியுறதாம் :)//

என்ன‌ ஒரு கொலைவெறி? என்ன‌ வ‌ச்சி காமெடி கீம‌டி ஒண்ணும் ப‌ண்ண‌லீயே? :)

*********************************

நன்றி Sangkavi!

ரொம்ப பீல் பண்ணி எழுதியிருப்பீங்க போல.//

ஃபீலீங்கா? அப்ப‌டின்னா என்ன‌ன்னே என‌க்கு தெரியாது பாஸ்? :)

*****************************

நன்றீ லெமூரியன்!

இது என்ன புதுசா?? முடியல கணேசு//

இதுக்கே முடிய‌ல‌ன்னா எப்ப‌டி? இன்னும் எவ்வ‌ள‌வு இருக்கு? :)

மன்மதனாபா நீ?? :-) :-)//

ஆட்டோகிராப் சேர‌ன் மாதிரி ஃபீல் ப‌ண்ணிக்கிட்டு இருக்கான், அத‌விட்டுட்டு இப்ப‌டியா ப‌ட் ப‌ட்டுன்னு உண்மைய‌ போட்டு உடைக்கிற‌து? :)

****************************************

கணேஷ் said...

நன்றி சின்ன அம்மிணி

அதானே. இப்படியே வளத்துட்டு இருந்தா, ஷாலினி, ஹரிணி, சியாமளா, திவ்யான்னு எத்தனை பேருக்குதான் நாங்க சப்போர்ட் பண்ணறது.//

மேட‌ம் நீங்க‌ இத்த‌ன‌ பேரை ச‌ப்போர்ட் ப‌ண்ற‌துக்கு, க‌ணேஷ்ன்னு ஒருத்த‌னை ம‌ட்டும் ச‌ப்போர்ட் ப‌ண்ண‌லாமே?

*****************************************

நன்றி மணி!

என்ன புது கேரக்டர் அந்த பேருலயும் யாரும் பின்னூட்டம் போடுவீங்களா?//

நீங்க‌ கேக்குற‌த‌ பார்த்தா, நீங்க‌ தான் அப்ப‌டி க‌மெண்ட் போடுற‌தா? எப்ப‌டி சிக்க‌ வ‌ச்சோம் பார்த்தீங்க‌ளா? :) :)

*****************************************

நன்றி Shankar!

- Mr. லெமூரியன்! Ganesh baashai la sollanumna, Tamil nadu la ganesha paathu epadi keta mudhal aal neenga than!!!//

ஹி ஹி ஹி.. அதே கேள்வி :) உன் உள்குத்தை ர‌சித்தேன் :) பை தி வே, லெமூர்ய‌ன் உன் ஃப்ர‌ண்டா? என்ன‌ ப‌த்தி எதுவும் அவர்கிட்ட சொல்ல‌லீயே?

*****************************************

ந‌ன்றி சத்ரியன்!

அப்படின்னா எத்தன? இனிஷியலோட சொன்னாதான் ஞாபகம் வருமோ?//

ஒரே ஆள் தான். அவ‌ன் ம‌ற‌ந்துட்டான் அப்ப‌டிங்க‌ற‌த‌ தான் நான் சொல்ல‌ வ‌ந்தேன். கேர‌க்ட‌ரையே ஸ்பாயில் ப‌ண்றீங்க‌ளே த‌லைவா?

அது யாரு சியாமலா-'ன்னு .அய்யோ பூரி கட்டயோடவா? நான் இல்ல ஆளை விடுங்கோ.......! GGGGGGoooooooooo...!//

அந்த‌ ப‌ய‌ம் இருக்க‌ட்டும். இனிமே இப்ப‌டி எட‌க்கு ம‌ட‌க்கா கேள்வி கேட்பீங்க‌?

***********************************

கணேஷ் said...

நன்றி Nisha!

ithu ganesh :)// எது க‌ணேஷ்? இதுக்கு ஷாலினியே ப‌ர‌வாயில்ல‌ போல‌யே :(

intha twist thaane enna maathiri blog arivu illaathavangala kooda comment poda vachchathu. :)//

உங்க‌ளுக்கு ப்ளாக் அறிவு இல்ல‌யா? இதெல்லாம் ரொம்ப ஓவர். உங்க‌ ப்ளாக் வச்சி க‌ம்பேர் ப‌ண்ணும்போது நான் தான் வெட்டி வேலை ப‌ண்ணிக்கிட்டு இருக்கேன். :)

aana, twist kodukurathulayum oru niyaayam venaama ganesh..?? //

இதுல‌ என்ன‌ அநியாய‌த்த‌ பார்த்தீங்க‌?

ungalukku therinja oru ponnoda name a kooda vittu vaikka maateenga polirukku? //

அது தான் த‌ப்பு. நான் கேர்ஃபுல்லா என‌க்கு தெரிஞ்ச‌ பொண்ணுங்க‌ பேர் எல்லாம் அவாய்ட் ப‌ண்றேன் :). அனைத்தும் க‌ற்ப‌னையே, ஹீரோ பெய‌ர் ம‌ட்டும் என்னுடைய‌து :)

are u a simbu fan? :P//

இதுக்கு நீங்க என்ன‌ நேர்ல‌ பார்க்கும்போது ரெண்டு க‌ன்ன‌த்துல‌யும் ப‌ளார் ப‌ளார்ன்னு அறை விட்டு இருக்க‌லாம் :(

Allah, enna kaappaaththu... :P //

க‌ட‌வுள்கிட்ட‌ முறையிடுற‌ அள‌வுக்கு, இப்ப‌ நான் என்ன‌ த‌ப்பு ப‌ண்ணேன்? :)

********************************

நன்றீ Cable Sankar!

innnum.. innum etirparkiren // ஓ.கே ஸார் :)இது புடிக்க‌லையா? :(

நன்றி SS!

நன்றி சரவணகுமரன்!

பாஸ், கதையை காமெடியா கொண்டு போங்க... //

கண்டிப்பாக பாஸ். நேயர் விருப்பம் :)

**********************************

Shalini said...

//இதுக்கு நீங்க என்ன‌ நேர்ல‌ பார்க்கும்போது ரெண்டு க‌ன்ன‌த்துல‌யும் ப‌ளார் ப‌ளார்ன்னு அறை விட்டு இருக்க‌லாம் :(
//

அதுக்குத்தான் நான் வரப்போறேன்.

G_4_GURU said...

Ganesh.. romba rasichu eluthureenga... Romba nalla iruku.. aana neraya bacholors oda vayithericha kottikireenga nu nenaikiren.. ;).. naan enna sollaleengoo...

Nisha said...

enoodathu manasa kastappaduththum (unmaila - apdi thaan irukkum), but unga blog apdiyilla, irukkura idaththaiyum, kavalaikalaiyum marakka vaikkuthu..

ithu kooda oruvagaila samooka sevai thaan..

aduththa nobel prizeku ungala nominee aakidalaama? :)

Nisha said...

and shalini,

enakku oru nalla chance kidaichirukku. thatti parikkaatheenga please..

ungalukkaana time varaamaiya poga poguthu?

enga poida poraar ganesh? :)

illa ganesh? :P

puduvaisiva said...

"அந்த‌ ப‌க்க‌த்தின் ந‌டுவே முக‌த்தை வைத்து முக‌ர்ந்தான். ப‌ழைய‌ நாட்க‌ள் க‌ண்முன்னே ஓடிக் கொண்டிருந்த‌து, க‌ணேஷ் க‌ண்க‌ளில் இர‌ண்டு துளி க‌ண்ணீர்"



தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில
மான் போல வந்தவனே
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ ...

வளரும் பிறையே தேயாதே
இனியும் அழுது தேம்பாதே
அழுதா மனசு தாங்காதே

கணேஷ் நீங்க நல்லவர ? கெட்டவரா?

கணேஷ் said...

நன்றி Shalini!

அதுக்குத்தான் நான் வரப்போறேன்.//

அவ்வ்.. நீங்க‌ நேர்ல‌ வ‌ர‌ப் போறீங்க‌ளா? பாதுகாப்புக்கு இஸ‌ட் பிரிவு க‌றுப்பு பூனைப்ப‌டை வ‌ர‌ சொல்ல‌வேண்டிய‌து தான்? :(

********************************

ந‌ன்றி guru!

Ganesh.. romba rasichu eluthureenga... Romba nalla iruku.. //

:) :)

aana neraya bacholors oda vayithericha kottikireenga nu nenaikiren..//

என்ன கொடுமை சார் இதெல்லாம்? ;)

.. naan enna sollaleengoo...// இது வேற‌யா? மு டி ய‌ ல‌ :)

******************************************

நன்றி Nisha!

enoodathu manasa kastappaduththum (unmaila - apdi thaan irukkum), but unga blog apdiyilla, irukkura idaththaiyum, kavalaikalaiyum marakka vaikkuthu..//

அய்யய்யோ.. ஏதேதோ சொல்றீங்க‌..

ithu kooda oruvagaila samooka sevai thaan.. // ச‌மூக‌ சேவையா? அவ்வ்வ்வ் :(

aduththa nobel prizeku ungala nominee aakidalaama? :)//

என்ன‌ வ‌ச்சி காமெடி கீம‌டி ஒண்ணும் ப‌ண்ண‌லீயே? :)

enakku oru nalla chance kidaichirukku. thatti parikkaatheenga please..//

ஆஹா.. நான் தான் வால‌ன்டிய‌ரா வ‌ந்து சிக்கிட்டேனா? என்நேர‌ம் :(

ungalukkaana time varaamaiya poga poguthu?// ம‌றுப‌டியுமா? உஷார். என‌க்கு சொன்னேன் :(

enga poida poraar ganesh? :)// :( :(
illa ganesh? :P // இதுக்கு நான் ப‌த்து ஷாலினிய‌ ச‌மாளிச்சி இருப்பேன்.

*****************************

நன்றி ♠புதுவை சிவா♠

தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில
மான் போல வந்தவனே
யாரடிச்சாரோ//

க‌தையில் அந்த‌ டைமையும், உங்க‌ள் க‌மெண்டையும் நினைத்து பார்த்தால், ச்சான்ஸே இல்ல‌ தலைவா! எப்ப‌டி எல்லாம் யோசிக்குறீங்க‌ :)

கணேஷ் நீங்க நல்லவர ? கெட்டவரா?//

கெட்ட‌வ‌ன் :)

************************

கணேஷின் புதிய நண்பன் said...

தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில
மான் போல வந்தவனே
யாரடிச்சாரோ//

க‌தையில் அந்த‌ டைமையும், உங்க‌ள் க‌மெண்டையும் நினைத்து பார்த்தால், ச்சான்ஸே இல்ல‌ தலைவா! எப்ப‌டி எல்லாம் யோசிக்குறீங்க‌ :)

கணேஷ் நீங்க நல்லவர ? கெட்டவரா?//

கெட்ட‌வ‌ன் :)
--------------------------------------
இதனால் அனைத்து வலை உலக நண்பர்களுக்கும் அறிவித்து கொள்வது என்னவெனில் கணேஷ் தான் ஒரு "கெட்டவன்" என்பதை தன் வாயினாலேயே ஒப்புக் கொண்டு விட்டார்.

ஊர்சுற்றி said...

//சியாமளா said...
கணேஷ் , இதோ பூரிக்கட்டை எடுத்துட்டு உங்க வீட்டுக்கு வந்துக்கிட்டே இருக்கேன்.
// ஹாஹாஹா... :)

Unknown said...

கணேஷ்,

இந்த தொடரில்(தொடர்-10) என்னோட பெயரில் வந்துள்ள comment -க்கு நான் பொறுப்பல்ல. என்னோட ஈமெயில்-id உங்களுக்கு தெரியும். அந்த id -ல் வந்தால் மட்டுமே நான் பொறுப்பு!

கணேஷ் said...

நன்றி கணேஷின் புதிய நண்பன்!

என்னை ந‌ண்ப‌னாக‌ ஏற்றுக் கொண்ட‌த‌ற்கு ஸ்பெஷ‌ல் ந‌ன்றி!

இதனால் அனைத்து வலை உலக நண்பர்களுக்கும் அறிவித்து கொள்வது என்னவெனில் கணேஷ் தான் ஒரு "கெட்டவன்" என்பதை தன் வாயினாலேயே ஒப்புக் கொண்டு விட்டார்.//

அதான் நானே சொல்லிட்டேனே? இதுல‌ நீங்க‌ க‌மெண்ட் வேற‌ போட்டு சொல்ல‌ணுமா? ந‌ண்ப‌ன்ன்னு சொல்லிட்டு எட்ட‌ப்ப‌ன் வேலை பாக்குறீங்க‌ளே ஃப்ரெண்ட்?

********************************

நன்றி ஊர்சுற்றி! :)

நன்றி Shalini!

கணேஷ்,
இந்த தொடரில்(தொடர்-10) என்னோட பெயரில் வந்துள்ள comment -க்கு நான் பொறுப்பல்ல. என்னோட ஈமெயில்-id உங்களுக்கு தெரியும். அந்த id -ல் வந்தால் மட்டுமே நான் பொறுப்பு!//

அது நீங்க‌ இல்ல‌ன்னு என‌க்கு தெரியும்? ஏன் இந்த‌ விள‌க்க‌ம்?

********************************

Porkodi (பொற்கொடி) said...

Kalakkala iruku ezhuthu nadai! congrats, innum niraya jollunga..

Nathan S said...

Today is the first time I am visiting your blog. I read the some of your stories and they are very very very interesting. Especially கணேஷ்-சியாமளா is very interesting story (all episodes) . Eagerly waiting for next episode. Keep it up.

Related Posts with Thumbnails