அன்புமனைவியின் மொழிபெயர்ப்புகள்!

வேலையில்லா திண்டாட்டத்தில்
காட்டின் நடுவே
சாவுமேளம் அடிப்பவன்
உச்சஸ்தாயியில்
தனிமையை சங்கடங்களை வலிகளை
அடித்துக் கொண்டிருக்க‌ என‌
தொடரும் சோகக்
கவிதையின் அடர்த்தியை
காதுகளின் வழியே
என் மனைவிக்கு
மொழிபெயர்த்துக் கொண்டிருந்தபோது
முழுமையாக பத்துநிமிடங்கள்
பொறுமையாகக இருந்தவள்
கைகளின் வழியே என்மீது
மொழிபெயர்க்க ஆரம்பித்தாள்
பதினோராவது நிமிடத்தில்

அந்த இடத்தில் ஆரம்பிக்கிறது
உச்சஸ்தாயியில்
சங்கடங்கள் வலிகள்
தொடரும் இன்னொரு
சோகக் கவிதை
அதன் பாடுபொருளாக‌
கணவர்கள்

******************

'உரையாடல் சமூக கலை அமைப்பின்' சார்பில் பதிவர்களுக்காக நடத்தப்பட்ட கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது!

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!

*******************

4 comments:

Anonymous said...

epo

enna cholavarenga..

onumey purialaiey..

lighta puriuthu..but correctaa- puriala..

annal nala eruku

padivu..

valaga valamudan.

Anonymous said...

ADVANCE BIRTHDAY WISHES(MAATU PONGAL)

தமிழ் said...

வெற்றி பெற வாழ்த்துகள்

பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்

கணேஷ் said...

நன்றி Complan Surya!

epo
enna cholavarenga..
onumey purialaiey..//

புரியலன்னா விட்ருங்க பாஸ் :)

நன்றி Anonymous!

ADVANCE BIRTHDAY WISHES(MAATU PONGAL)//

ஸேம் டூ யூ :)

நன்றி திகழ்!

நன்றி சக்தியின் மனம்

Related Posts with Thumbnails