பதின்பருவத்து நெருப்பு!



புருவ வளைவுகளை
நேர்த்தியாக செதுக்கி
சுண்டி இழுத்தவளிடம்
விழுந்த மனம்
மதியத்தில் தெற்றுப்பல்
மாலாவிடம் தெறித்த‌
சிரிப்பில் சிக்கியது
ஒரு வ‌ழியாக‌
வீட்டிற்கு வந்தால்
முறைப் பெண்
புதிதாக‌ இள‌மையாக‌
அழகிய தாவணியுடன்
வந்ததும் அத‌ன்
அவ‌ள் ம‌டிப்பில்
ம‌டிந்தது
*
*
*
இப்ப‌டியான‌ என‌து
ப‌தின் ப‌ருவ‌த்து
காத‌ல் நெருப்பு
ஒருவ‌ர் கை மாறி
ஒருவ‌ர் கை செல்லும்
ஒலிம்பிக் தீப‌ம்
போல் அணையாம‌ல்!

******************************

10 comments:

நேசமித்ரன் said...

ஐயோ கவிதை கவிதை கவிதை !!!

தமிழ் நாடன் said...

மொத்தத்துல நம்ம ஜொள்ளுக்கெல்லாம் பதின்ம பருவத்து நெருப்புன்னு இலக்கிய சொல்லாடலா! பதின்ம பருவத்துக்கு பிறகும் விடும் ஜொல்லுக்கு என்ன பேரு ராசா?

ரோஸ்விக் said...

நிதர்சனங்கள் கவிதையாக! அருமை!! அருமை!! வாழ்த்துக்கள்.

Rajalakshmi Pakkirisamy said...

//காத‌ல் நெருப்பு
ஒருவ‌ர் கை மாறி
ஒருவ‌ர் கை செல்லும்
ஒலிம்பிக் தீப‌ம்
போல் அணையாம‌ல்!//

Super o Super.. Toooooooo good

Nice Kavithai..

Try some more.....

SUREஷ்(பழனியிலிருந்து) said...

good

கணேஷ் said...

நன்றி நேசமித்ரன்.! ஐயோ ஆமா :)

நன்றி தமிழ் நாடன்! இலக்கியம், சொல்லாடல் எல்லாம் பெரிய வார்த்தை. நான் அவ்வளவு வொர்த் இல்லைங்கோ. :) நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில், எனக்கு சத்தியமாக தெரியாது. :)

ந‌ன்றி ரோஸ்விக்!

ந‌ன்றி இராஜ‌ல‌ட்சுமி ப‌க்கிரிசாமி! ட்ரை ப‌ண்ணுகிறேன்.

ந‌ன்றி SUREஷ்!

மகேஷ் : ரசிகன் said...

ஹி ஹி ஹி.... மச்சி, காலேஜ்ல பார்த்த மாதிரியே இருக்கியே?

ஊர்சுற்றி said...

:)

விக்னேஷ்வரி said...

நல்லாருக்கு கணேஷ்.

அன்பரசன் said...

Nice...

Related Posts with Thumbnails