உயிர்கொல்லிகள்!

புகைந்து கொண்டிருந்த
ஏக்கங்களை
உன்னில் கொட்டிய
நொடியில்
உன் கண்களில் தெறித்த
நெருப்பு
திடீரென முளைத்த
ஆறாம் விரலுக்கு
ப‌ற்ற‌ வைத்தேன்

நாளொரு பொழுதும்
பொழுதொரு க‌ண‌மும்
வ‌ள‌ர்த்த‌ காதல், முத்தங்கள்
என்னை ஏகாந்த்த‌தில்
சுழ‌ல‌ வைக்கும்
பொழுதுக‌ள்
பொழுதுக‌ளில்
உள்ளே இழுத்த‌ புகையின்
ப‌ரிணாம‌ சுழ‌ற்சி
உச்ச‌ந்த‌லையை தாக்கி
சுழ‌ன்றேன் பின்
நின்றேன்

ஏதோ எவ‌னோ
கார‌ணமாக‌
சம்பந்தமில்லாதவன்
போல‌
உத‌றி எழுந்து
ச‌ம்ப‌ந்த‌மில்லாமல்
போன போது
ஒரு நொடியில்
எதுவும்
ச‌ம்ப‌ந்த‌மில்லாதது
போல்
உதிர்ந்த‌ புகை சாம்ப‌லின்
பிரிவு

பார்க்கும் காத‌ல‌ர்கள்
பற்ற வைக்கும்
நினைவலைகளின்
ரணம்
தொட‌ர்ந்து வ‌ந்து
விட்டாலும் எவன்
கையில் க‌ண்ட‌வுட‌ன்
உட‌னே
பற்ற வைக்க
ரணம்

நீ விட்டு சென்ற‌
காத‌லின்
நினைவ‌லைகள்
ம‌ட்டும் என்றும்
அழியாம‌ல்
நெஞ்சில் த‌ங்கி
பின்னர்
வெளியே விட்ட‌
பின்னும்
கொஞ்ச‌ம் அழியாம‌ல்
நெஞ்சில் த‌ங்கி
சித்ர‌வ‌தை

ஒரே வகையில்
ஒரே முறையில்
ஒற்றுமை
இர‌ண்டுமே
உயிர்கொல்லி!

*************************

3 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

மந்திரன் said...

கொஞ்சம் வித்த்யாசமாக இருக்கு ..
பாராட்டுகள்

அன்புடன் மலிக்கா said...

நல்ல சிந்தனை, சற்று வித்தியாசம்
வாழ்த்துக்கள்

Related Posts with Thumbnails