காதல் செத்து ஒழியட்டும்

காதலின் பரம‌திருப்தி ஆணுக்கும்
பெண்ணுக்கும் சமம் எனும்போது
தோல்வி மட்டும் ஆணுக்கு
ச‌பிக்க‌ப்ப‌ட்ட‌து ஏன்?
க‌ட‌வுளே உன‌க்கு தெரியுமா?
என‌க்கும் தெரிய‌வில்லை,
ஒன்று ம‌ட்டும் தெரியும்..

யாருமற்ற தனிமையில் ஒன்றுக்கும்
உதவாத இர‌ண்டு நாள் அழுகை,
விசும்ப‌ல்கள், ப‌ட்டினி
எவ‌னோ ஒருவ‌னுட‌ன் 1000 பேர்
சூழ‌ க‌ல்யாண‌ம், முத‌லிர‌வு,
ச‌ந்தோஷ‌ வாழ்க்கையில் ஒரு குழ‌ந்தை,
ஒருவேளை க‌ண‌வ‌ன் ஒரு அம்மாஞ்சி
எனில் சந்தோஷம் குழ‌ந்தையின்
பெய‌ர் காத‌ல‌ன்!
பேர் தெரியாத‌ திருவிழாவிலோ,
பேருந்திலோ பார்த்துவிட்டால் பேசும்
துணிச்சல் எந்த‌ புதுமைபெண்ணுக்கும்
இல்லை ஆனால் மீண்டும்
யாருமற்ற தனிமையில் ஒன்றுக்கும்
உதவாத இர‌ண்டு நாள் அழுகை,
விசும்ப‌ல்கள், ப‌ட்டினி
பெண்ணே, உன் காதல் தோல்வி
இப்படித்தானே போகிறது?

ஆணின் வலி தெரியுமா உனக்கு?
சொல்ல வார்த்தைகளை கண்களை
மூடி தேடிக் கொண்டிருக்கிறேன்
ஒன்றும் புதிதல்ல, நீ செய்வதைத்
தான் நானும் செய்கிறேன்,
கொஞ்சம் புதுமையாக
போதையுடனும், புகையுடனும்
ப‌ல வருடஙகள்
ஆனால் ஒரு வித்தியாசம்

நீ புது வாழ்க்கையில்
காதலுக்கு முற்றுபுள்ளி இட்டு
வருந்திக் கொண்டு வாழ்கிறாய்!

நான் வருந்திக் கொண்டு
நீ இட்ட முற்றுப்புள்ளி அருகே
ஒரு புள்ளி வைத்துத் தொடர‌
விழிகளால் காத்துக் கொண்டு
வாசலில் காத்திருக்கிறேன்
என்றாவது வருவாய் என‌
(மூட)நம்பிக்கையுடன்..

எனக்கு நிமிடங்கள் வருடங்களாகவும்,
உனக்கு வருடங்கள் நிமிடங்களாக‌
போனாலும் பயனில்லை
நீ வரவே இல்லை
என் நம்பிக்கையும் நம் காதலுடன்
இத்துபோய் துருப்பிடித்துக் கொண்டிருப்பது
மட்டுமே மிச்சம் இல்லை எச்சம்..

இதோ என் வாழ்க்கையை நான்
ஆரம்பிக்க எத்தனிக்கிறேன்
உன்னை குழந்தையுடன்
பேர் தெரியாத‌ திருவிழாவிலோ,
பேருந்திலோ கண்ட கணத்தில் இருந்து

இது பழிக்கு பழியா?
தெரியவில்லை, பலவீனபடுத்தும்
காதல் எனக்கு தேவையில்லை
துச்சமாக தூக்கியெறிந்த‌
காதல் தேவதை இல்லை பிசாசு
(வேண்டாம், இல்லை என்று ஆனபின்
அவளை பற்றி சொல்ல
என்ன உரிமை?)
முடிவாக ஒரு பெண், எனக்கு
தேவையில்லை!

அவள் புதைத்த காதலின்
சமாதியில் நானும் பூக்களைத்
தூவுகிறேன்!
காதல் செத்து ஒழியட்டும்

தோல்வி மட்டும் ஆணுக்கு
இல்லை காதலர்களுக்கு
ச‌பிக்க‌ப்ப‌ட்ட‌து ஏன்?
க‌ட‌வுளே உன‌க்கு தெரியுமா?
ஒருவேளை
இதுதான் முடிவு என்ற தெரிந்ததினால்
தான் பதில்கூறாமல் மௌனமாக‌
இருக்கிறானோ கடவுள்?

********************

Related Posts with Thumbnails