
கலைஞரிடம் ஜெ : எதுக்கெடுத்தாலும் உண்ணாவிரதம் உண்ணாவிரதம்ன்னு அறிவிச்சுடுறீங்களே? எப்படி உங்களால மட்டும் முடியுது? ஒரு நாள் இருந்ததுக்கே நான் 5 கிலோ கொறஞ்சிட்டேன்?
ராமதாசிடம், வேலையாள்: அய்யா, தோட்டத்தில இருந்து போயஸ் கார்டனுக்கு ஒரு கூடை மாம்பழம் பார்சல் அனுப்பிடலாம்ங்களா?
வைகோவிடம் ம.தி.மு.க தொண்டன் : தலிவரே, நமக்கு ஓட்டு போடுறதுக்கு தான் ஆள் இல்லைன்னு நெனச்சிகிட்டு இருந்தேன். இப்ப வர்ற எலெக்சன்ல வேட்பாளரை நிக்க வைக்கறத்துக்கு கூட கட்சியில ஆள் இல்லைன்னு சொல்லிக்கிறாங்களே, நெஜமா?
விஜயகாந்திடம், ஒருவர்: சார், கூட்டணி வைக்க போறீங்களா? உங்க மரியாதை என்னாச்சு? ஸாரி.. ஐ மீன் உங்க மரியாதை சூட்டிங் என்னாச்சு?
கலாநிதியிடம், தினகரன் வாசகன் : சார், எலெக்சன் வேற வரப் போகுது? தி.மு.க பத்தி சும்மா ஒரு சர்வே எடுத்து போடுங்களேன்? கொஞ்சம் சூடா இருக்கும்?
மன்மோகன்சிங்கிடம், ஒரு இந்தியன்: "வேணாம், வலிக்குது அழுதுடுவேன்"ன்னு இத்தனை நாளா புலம்பிக்கிட்டு இருந்த நீங்க, "அப்பாடா, எலெக்சன் வந்துடுச்சி"ன்னு பெருமூச்சு விடுறது தமிழ்நாடு வரைக்கும் கேட்குதாமே, உண்மையா?
டீ.ஆரிடம், கொலைவெறி டீ.ஆர் ஃபேன் கிளப் மெம்பர் : சார், உங்க கட்சியோட பேர் என்ன? அது இந்த எலெக்சன்ல போட்டியிடுதா?
பீட்டர்சன் மற்றும் ஜெயவர்த்தனேவிடம் வெட்டோரி: எப்படி போட்டாலும் அடிக்கிறானுங்க? என்னாலயும் முடியல? ஷேவாக், யுவராஜ் எல்லாம் பார்த்தா எனக்கு அழுகை, அழுகையா வருது. நானும் ரிசைன் பண்ணப் போறேன்.
ரஜினியிடம், சில இயக்குநர்கள்: சார், கலெக்சன் ரொம்ப கம்மியாயிடுச்சு. சும்மா எங்களோட சேர்ந்து ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்க முடியுமா? பப்ளிசிட்டி பண்ண வசதியாய் இருக்கும்.
இயக்குநர் பாலாவிடம், ரசிகன்: சார், அடுத்த படம் 2015 லயா ரிலீஸ்?
சுப்ரமணியசாமியிடம், ஒரு ஆள்: சார், நாளைக்கு நம்ம கேஸ் கோர்ட்டுக்கு வருது. சும்மா ஒரு ரவுண்ட் போயிட்டு வந்துடலாமா?
'சோ'விடம், ஒரு ஆள் : சார், அ.தி.மு.க சார்பா இந்த எலெக்சன்ல போட்டியிடுறதுக்கு உங்கள நாமினேட் பண்ணி இருக்காங்களாமே?
அஜீத்திடம் விஜய் : வரிசையா மூணு படம் ஃப்ளாப் கொடுத்ததுக்கே, என்னைய போட்டு இப்படி கும்முறாய்ங்களே? நீங்க மட்டும் எப்படிண்ணா வரிசையா 7 படம் ஃப்ளாப் கொடுத்துட்டு அசராம மறுபடியும் ஃபார்முக்கு வந்தீங்க?
பிரியாமணியிடம், ஒரு ஜொள்ளு ரசிகன்(டிஸ்கி: நான் இல்லை): மேடம், உங்களுக்கு தமிழ்சினிமா மேல ஏன் இவ்வளவு கோபம்? அதே ட்ரஸ்ஸோட இந்த பக்கம் வந்துட்டு போகக் கூடாதா?
*******************
கேட்ககூடாதவர்களிடம் கேட்க விரும்பும் ஏடாகூடாமான கேள்வி!
Labels:
சில கேள்விகள்
Subscribe to:
Posts (Atom)