வாளிப்பான காதல்!

வாரி க‌ட்டிக் கொள்ளும்
குழ‌ந்தையைப் போல்
கதவைத் திறந்ததும்
ஒவ்வொரு முறையும் என்னை
வாரிக் கட்டிக் கொள்ளும்
வாளிப்பான காதல்!

சிவ‌ப்பு ப‌ட்டாசு வெடியின்
சிவ‌ப்பு ம‌ருந்து காத்திருக்கும்
சின்ன‌ நெருப்பு போல்
என்னுள் புதைந்து இருப்ப‌து வெடிக்க‌க்
‍‍காத்துக்கொண்டிருக்கும் உன்
கண்ணசைவின் ச‌ம்ம‌த‌ம்!

கோடை கால தண்ணீர் தீர்க்கும்
தாகம் மீண்டும்
தாகம் தூண்டும் போல்
தாப‌ம் மீண்டும்
தாகம் தூண்டும்
தீ நீ!

தனிமையின் துணையில்
தலையணை அணைக்கும் மனம்போல‌
அணைக்க தவிக்கும் மனம்
ஏங்கும் த‌லைய‌ணை
உன் மெத்தை!

இவை யாவும்
உள்ளமும் உள்ளம்
சார்ந்த காதல் அன்று
உடல் ம் டல் சார்ந்த
கா ம்!

***********************

3 comments:

Shankar said...

Its too HOT da :)

க.பாலாசி said...

//தனிமையின் துணையில்
தலையணை அணைக்கும் மனம்போல‌
அணைக்க தவிக்கும் மனம்
ஏங்கும் த‌லைய‌ணை
உன் மெத்தை!//

அழகான கவிதை....

கணேஷ் said...

Shankar said...
Its too HOT da :)//

Oh Really... :) Thanks da..

*******

நன்றி க.பாலாசி,

அழகான கவிதை....//

நீங்க பாராட்டியது, உண்மையிலேயே பெருமையாக உள்ளது தல!

********

Related Posts with Thumbnails