தீபா..வளி...வலி!

உன‌க்கு என் மீது காத‌லா
உன் கேள்விக்கு
இல்லை பைத்தியம்
என என் ப‌திலை
நீ எதிர்பார்க்க‌வில்லை
நானும்
நீ ர‌சிப்பாய் என‌

நீ ஏன் க‌விதையாக‌
பேசுகின்றாய்
ஆச்ச‌ர்ய‌மில்லை தின‌மும்
குற்றால‌த்தில்
குடியிருப்ப‌வ‌ன் அருவியில்
குளிப்பது
நீ
க‌ல‌க‌ல‌வென‌ சிரிக்கும் ச‌ப்த‌ம்
வித்தியாச‌மில்லை
அருவி நீர் கொட்டும் ச‌ப்த‌ம்
அவ‌ன் அடிக்கடி கேட்பது

முடிய‌ல‌ சாமி
முடிவே இல்லையா
உன் கவிதை க‌த‌ற‌லுக்கு
என்ற‌ உன் க‌த‌ற‌லுக்கு
நான்
ஒரு வேளை
இருக்க‌லாம்
ம‌ர‌புக்க‌விதை என‌து
புதுக்க‌விதை ஆன‌வுடன்
ஹைக்கூ க‌விதை
பிற‌ந்தால்?

என் ப‌தில்
முடிந்த‌க‌ண‌த்தில்
ம‌ர‌பு புதுசாக‌ மாற‌
துடித்தது
தவித்தது

ஒரு நாள் ம‌ட்டும்
இல்லை
365 நாட்க‌ளும்
தீபா உன்
உடன்
தீபாவளி

மெல்லவும் முடியாமல்
விழுங்கவும் முடியாமல்
தவித்த மாதிரியான‌
சூழ்நிலையில்
நினைக்கவில்லை
உன்னை
சந்திப்பேன் என்று
சில சொற்களுக்கே
சோதனை என்கிறபோது
வார்த்தைகள் வ‌ர‌ம்
வரம் வாங்கி வ‌ரைந்தேன்
நினைவுகளின் வட்டம்
விட்டம் பெரிதாகி
க‌ட‌ந்த‌ கால
காத‌ல் வாழ்க்கையின்
மைய‌த்தில் என்னை
விட்ட‌து
எத்த‌னை க‌விதைக‌ள்
தீபா

தீபாவ‌ளி தீபா'வலி'யாக‌
உடைந்த‌ ஒரு நாளில்
இருந்து
இன்று வ‌ரை
ஒரு நாள் ம‌ட்டும்
இருந்த‌து
ஒரு நாளும் இல்லை
என் வாழ்வில்

டிஸ்கி: இந்த கவிதை(அடடே, சொல்லவே இல்லை) எழுதியதில் இருந்து தீபாவளி செலிப்ரேஷன் மூடே போச்சு. :( ஹெல்ப் மீ..


இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்!


***************************************

1 comments:

Rajalakshmi Pakkirisamy said...

தீபாவளி நல்வாழ்த்துகள்..

Related Posts with Thumbnails