அடர்த்தியான மௌன விரதம்!

உனக்குமி னக்குமான‌
அடர்த்தியான மௌனத்திற்கு
வேலையில்லாத‌ வேளைகளான

நெருக்கியடித்த
கல்லூரி பேருந்து
பயணங்களின் பெருமைகளை
தோள் தொடர்ந்து
வாதம் இடித்த பொழுதுகளிலும்

மௌன மனதின்
கோரிக்கைக‌ளின்
விர‌த‌ம் உடைத்த
ஆல‌ய‌ த‌ரிச‌ன‌ங்க‌ளில்
ஆசை நிராசைக‌ளின்
மௌன பேரிரைச்சல்
ப‌கிரும் பொழுதுக‌ளிலும்

பெய‌ர் தெரியாத உண‌வ‌க‌ங்க‌ளில்
எதிரெதிர் ப‌க்க‌ங்க‌ளில்
உண‌ராத‌ ப‌க்க‌ங்க‌ளை
அசைபோட்டு உண்ட‌
நிமிட‌ பொழுதுக‌ளிலும்

கருவறை தோழி ஒருத்தியின்
திருமண நாளில் முக‌த்தில்
உடலில் பாதத்தில் வெட்க‌ம்
வ‌ளைய‌ வ‌ளைய‌ வ‌ளைந்த
வேளைகளில் ஒன்றாகக் க‌ளித்த‌
புகைப்பட‌ பொழுதுக‌ளிலும்

இப்ப‌டியே
இன்னும்
*
*
இணைப்பு துண்டிக்கபடுமென
பயம் அறவுமற்ற
விடுதியின் பைத்திய‌க்கார‌
தொலைபேசி பொழுதுக‌ளிலும்
இப்ப‌டியே
இன்னும்
*
*
இப்படி
எப்பொழுதுக‌ளிலும்
எட்டிப்பார்க்காமல்
உள்ள‌த்தில் உன்னை சும‌க்க‌
ஆர‌ம்பித்த‌ நாட்க‌ளில்
வார்த்தைக‌ளில் சும‌க்க
ஆர‌ம்பித்தேன்
அவைக‌ளுக்கு க‌டைசி வ‌ரை
பிர‌ச‌வ‌ம் கொடுக்காம‌ல் போன‌தால்
ச‌வ‌மாக‌வே அலைகிறேன்

****************************

2 comments:

VISA said...

அப்பாடா? உண்மையாவே அடர்த்தியான கவிதை.

மந்திரன் said...

//
ஆசை நிராசைக‌ளின்
மௌன பேரிரைச்சல்
உண‌ராத‌ ப‌க்க‌ங்க‌ளை
அசைபோட்டு உண்ட‌
பிர‌ச‌வ‌ம் கொடுக்காம‌ல் போன‌தால்
ச‌வ‌மாக‌வே அலைகிறேன்
//

அழகான வார்த்தை பிரவோகம் ...

காதலில் தோல்வியா ?

Related Posts with Thumbnails