ரோஜாவுக்கே ரோஜா!

கொட்டும் மழையோ
பிளக்கும் வெயிலோ
உன்னுடன் இருக்கும்போது
உறைக்கவில்லை
சலனமற்ற சாத்தானின்
இரவில்தான் சப்தமாக
உறைக்கிறது தனிமை!
உன்னுடைய வெறுமை!

40 டிகிரி சென்னை வெயிலோ,
4வது மாடி போத்தீஸோ,
400 பேருடைய உஸ்மான் ரோட்டின் உதாசீன இடியோ,
பெரிதாகத் தெரியவில்லை
உனக்கான பரிசுப்பொருளைத்
தேரி அலையும்போது!

புத்தாடை பரிசளித்தேன்
பரவாயில்லை என சுளிக்கவில்லை
வலிக்காமல் தலையில் குட்டினேன்
கோபமாக முறைக்கவில்லை
ரோஜாவுக்கே ரோஜா வாங்கி சூட்டினேன்
ஏன்? புருவம் உயர்த்தவில்லை
தெரியாமல் தெரிந்தே ஒட்டி நடந்தேன்
விலகி நடக்கவில்லை
நாள் முழுவதும் உடனிருந்தாலும்
வீட்டுக்கு விடைபெறும்போது
விட்டு விட்டு வலித்தது இதயம்
மனது விட்டு கேட்கத் துடித்தது
ஏன்
வருடம் முழுவதும்
உன்னுடைய பிறந்தநாளாக
இருக்கக் கூடாது?

************************

From Archive:

ப‌ர்த்டேக்கு நீயே செய்து
எடுத்து வ‌ந்த‌ குளோப் ஜாமூனைவிட
தேனாய் இனித்தது
செல்லும்போது க‌ன்ன‌த்தில் நீ இட்ட‌ முத்த‌ம்!
ச‌ரி அதே ஸ்வீட் உன் ப‌ர்த்டேக்கு
த‌ர‌லாமென்று நான் நினைத்தால்
திளைக்க திளைக்க‌ இத‌ழ்முத்த‌ம்
த‌ந்து யோசிக்க‌ வைத்தாய்
கிஃப்ட் என‌க்கா? உன‌க்கா?
இல்லை ந‌ம‌க்கு.

***************

2 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ரோஜாவுக்கே ரோஜா வாங்கி சூட்டினேன்//

நாங்கள் எல்லோரும்..

பீர் | Peer said...

//சலனமற்ற சாத்தானின்
இரவில்தான் சப்தமாக
உறைக்கிறது தனிமை!
உன்னுடைய வெறுமை!//

முற்றிலும் உண்மை நண்பா,

Related Posts with Thumbnails