ஏ.ஆர்.ரகுமான், ச.ந.கண்ணன், சத்யம்‍ - ஒரு கரடி


ஏ.ஆர்.ரகுமானுக்கு கோல்டன் குளோப் விருது கிடைக்க வேண்டும் என்று அவர் பர்த்டே அன்று ஒரு பதிவு போட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தேன். அதே போல் இன்னும் சரியாக ஒரே ஒரு மாதம். பிப்ரவரி 22 ஆம் தேதி தெரிந்துவிடும். தமிழ்நாட்டில் இருந்து, இல்லை இந்தியாவில் இருந்து, இதுவும் இல்லை ஆசியாவில் இருந்து முதன்முதலில் ஆஸ்கார் விருது வாங்கிய மனிதர் ஏ.ஆர்.ரகுமான் என்று உலகமே அதிரப் போகிறது. இது கண்டிப்பாக நடக்கும். He is fully deserved for OSCAR. ஒரு தமிழனாக நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விஷயம்.

நம் தமிழ் சினிமாவில் இருந்து ஆஸ்கார் விருதுக்கு தகுதியானவர்கள் இன்னும் இரண்டு பேர் இருக்கிறார்கள். ஒருவர் இசை ஞானி இளையராஜா, மற்றவர் கமலஹாசன். இளையராஜாவுக்கு 1986 ஆம் வருடமே மௌனராகம் படத்தின் BGM மற்றும் பாடல்களுக்கு கிடைத்து இருக்கவேண்டும். ம்ம்ம். பெருமூச்சு மட்டும் இப்போது. மகாநதி, அன்பேசிவம் படங்களுக்கு கமலஹாசனுக்கு கிடைத்து இருக்க வேண்டும். கமலஹாசனின் "மருதநாயகம்" முயற்சிக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

இந்தியாவில் இன்று தான் ரிலீஸ் ஆகிறது SLUMDOG MILLIONAIRE படம். ஆனால் தமிழ் இணையத்தில் மூன்று வாரத்திற்கு முன்பாக இருந்து இந்த படத்தின் விமர்சனங்கள் பட்டையைக் கெளப்பின. தமிழ் பதிவுலகை ரெகுலராக வாசிக்கும் யாருக்கும் இந்த படத்தின் கதை தெரியாமல் இருக்காது. இருந்தாலும் ஏ.ஆர்.ரகுமானுக்கு பெருமை சேர்த்த படம் என்ற ஒரே காரணத்திற்காக இரண்டு நாட்களுக்கு முன்பே இன்று இரவு சத்யம் தியேட்டரில் 7.15 மணி காட்சிக்கு டிக்கெட் புக் பண்ணி விட்டேன். காலையில் பேப்பரைப் பார்த்தால் ஆஸ்கார் நாமினேஷன்ஸ். கலக்குறாங்க SLUMDOG MILLIONAIRE TEAM.

***************

டாக்டர் சானியா மிர்சா ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸில் இரண்டாவது சுற்றிலும், இரட்டையர் பிரிவில் முதல் சுற்றிலும் தோற்றுவிட்டு இந்தியாவுக்கு திரும்புகிறார். இதைப் பார்க்கும்போது ச.ந.கண்ணனின் இந்த பதிவு தான் நினைவுக்கு வருகிறது. அவர் சொன்ன பஞ்ச், "சானியா இன்னொரு மோசமான உதாரணம். அவர் இன்றுவரை அவர் திறமைக்காக அதிகம் தடவை பேசப்படவில்லை. விளைவு, கடந்த இரண்டு வருடங்களாக சிறு முன்னேற்றமும் அடையாமல் மீண்டும் மீண்டும் சர்ச்சைகளுக்காகப் பேசப்படும் வீராங்கனையாக மாறிவிட்டார். "

அதே பதிவில் அவர் சூப்பர் சிங்கரில் இருந்து ராகினிஸ்ரீயை துரத்திவிட்டதைப் பற்றி சுவையாக அலசியிருப்பார். நான் ரெகுலராக வாசிக்கும் பதிவர்களில் அவரும் ஒருவர்.

****************

சத்யம், புரியாத பூதம். நாளுக்கு நாள் ஒரு கரடி சி.பி.ஐ விசாரணையில் இருந்து வெளிவருகிறது. இல்லாத ப்ராஃபிட்டை இருக்கிறதாக காட்டி ஷேர் மார்க்கெட்டை ஒரு வழி பண்ணினார். இப்போது இல்லாத 13,000 ஊழியர்களுக்கு மாதம் மாதம் சம்பளமாக 10 கோடியை ஏப்பம் விட்ட மோசடி உண்மையில் அதிர்ச்சி அளிக்கிறது. மொத்தமாகவே 40,000 பேர் தான் சத்யமில் வேலை பார்க்கிறார்களாம். எதற்கும் ஒரு முறை L&T சத்யமை வாங்குவதற்கு முன் நன்றாக யோசிப்பது நல்லது.

இந்த காமெடிகளுக்கு நடுவே வந்த ஒரு ஃபார்வர்ட் இமெயில், கொடுமையின் உச்சகட்டம். அதன் சுருக்கம், "நம் நாட்டின் பிரதமர், தன் பதவியை ராஜிநாமா பண்ணிவிட்டால், இந்திய மக்கள் அனைவரும் அநாதையாகிவிடுவார்களா? யாருக்கும் வேலை இருக்காதா? நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து விடுமா?" இதே மாதிரி பேசிக்கொண்டே போய் கடைசியில், "அதே போல், தற்போது சத்யமில் நடப்பது மேனேஜ்மென்ட் ப்ராபளம். அப்படியே அது பெரிய பிரச்சினை என்றாலும் ஒருவரால் 53,000 ஊழியர்களுடன் கூடிய சத்யமை உருவாக்க முடிந்தால், ஏன் 53,00 ஊழியர்களால் அதே டேமாஜான சத்யமை திரும்ப உருவாக்க முடியாது?". பாஸ், அந்த 53,000 கவுண்ட்டே இன்னிக்கு தப்பு, 40,000 மட்டுமே என்று தெரிந்தவர்கள் யாராவது அவருக்கு சொல்ல வேண்டும்.

***************

4 comments:

Anonymous said...

ஒருவர் இசை ஞானி இளையராஜா, மற்றவர் கமலஹாசன். //

Ilayaraj OK.But kamal hassan ??
i think he cant make it up as a film maker!
because Kamal is a self obsessive and merciless plagiarist.As an actor he is not acting any quality scripts.

anbe sivam taken from planes,trains,automobiles.
Mahnadhi - a derailed approach -> good treatment to a normal masala film.
and most of his films taken from holliwood movies.Its really a shame that we are sending a copy of americal film to america.He is a smart Re-maker.Thats it.

Ofcourse most of his movies recommended to oscars by the indian Govt but for that only we cannot say kamal deservs oscars.
First let him make sensible movies then he can think about all the film festival awards and academy award.

Better Ilayaraja can do some effort to send his work to "Grammy" award not to academy awards.

சின்னப் பையன் said...

டாக்டர் பட்டம் குடுத்துட்டாங்களா????? அவ்வ்..................

வினோத் கெளதம் said...

சுவரஸ்யமான எழுத்து நடைங்க உங்களோடயது..

கணேஷ் said...

உங்கள் கூற்றும் சரியாக இருக்கலாம் வருகைக்கு நன்றி praburajk!

//ச்சின்னப் பையன் said...
டாக்டர் பட்டம் குடுத்துட்டாங்களா????? அவ்வ்...........//

பட்டம் எப்பவோ கொடுத்துட்டாங்க சார். எனது தொடர்புடைய லிங்க். வருகைக்கு நன்றி ச்சின்னப்பையன்!

//vinoth gowtham said...
சுவரஸ்யமான எழுத்து நடைங்க உங்களோடயது..//

உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி!

Related Posts with Thumbnails