திருமங்கலம் இடைத்தேர்தல், வோட்டர் ஐடி, பேலட் பாக்ஸ்.

2002 ஜூன் மாதம் 29ஆம் தேதி இரவு, ப்ளஸ் டூவில் 1112 மார்க் வாங்கியதைக் கொண்டாட ஃப்ரெண்ட்ஸுடன் சேர்ந்து திருமங்கலத்தில் இருக்கும் சுத்த அசைவ ஹோட்டலான முனியாண்டி விலாஸில் மூச்சு முட்ட முட்டை கொத்து பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். தூரத்தில் நடந்த பொதுகூட்டத்தில் வைகோ கட்சி மாநாடு நடந்து கொண்டிந்த்து. சரியான கூட்டம். அதுவும் நடந்து கொண்டிருந்த இடம் பஸ் ஸ்டாண்டிற்கு மிக அருகில். சத்தத்தை ஸ்பீக்கர் மூலமாக திருமங்கலம் முழுவதும் அலற விட்டுக் கொண்டிருந்தார்கள். நாங்கள் சாப்பிட்டு முடித்து விட்டு வீட்டுக்கு போகும் வரை பேசிக் கொண்டு இருந்தார். ஆனால் அப்போது கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை இந்த‌ பேச்சுக்காக ஜுலை 11ஆம் தேதி கைது செய்யப்படுவார் என்று.

தியாகராஜ இன்ஜினிய‌ரிங் காலேஜ்க்கு கவுன்சிலிங்காக அப்பாவுடன் பஸ்ஸில் போகும்போது அவரை திருமங்கலம் ஜுடிசியல் கோர்ட்டில் புரொடியூஸ் பண்ண கூப்பிட்டு போய்க் கொண்டு இருந்தனர். வரிசையாக பத்து போலீஸ் கார் போனது. தொடர்ந்து பத்து நாட்கள் எல்லா பத்திரிக்கை, டி.வியிலும் திருமங்கலம் கூட்டத்தைப் பற்றி திரும்ப திரும்ப போட்டுக் கொண்டிருந்தார்கள். எங்களுக்கெல்லாம் பெருமையாகவும் ஒரு பக்கம் வேதனையாகவும் இருந்தது, "ச்சே, அந்த கூட்டத்தில் ஒரு மூலையில் பத்து நிமிசம் நின்று இருந்தால் கூட, ஏதாவது ஒரு பத்திரிக்கை இல்ல டி.வியில் எங்கள் முகத்தை Out of Focusலாவது காட்டி இருப்பார்கள்" என்று.

அதற்கு பின் நான் இன்ஜினியரிங் காலேஜில் சேர்ந்து, செகண்ட் இயர் படிக்கும்போது தான் அவரை ரிலீஸ் பண்ணினார்கள். அதற்கு அப்புறம் மறுபடியும் எல்லா மீடியாக்களிலும் இடைத்தேர்தலுக்காக திருமங்கலம் பெயர் இப்போது அடிபடுகிறது. என் வாழ்வில் முதல் முறையாக ஓட்டு போட போகிறேன். வோட்டர் ஐடி வாங்கி நான்கு வருடம் ஓடிப் போனாலும் இப்போது தான் எனக்கு ஓட்டு போட வாய்க்கிறது.

2004 லோக் சபா தேர்தலுக்கு அப்புறம் தான் என் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்தனர். காலேஜ்க்கு லீவ் போட்டு இதற்காக‌ ஊருக்கு போனேன். ஃபோட்டோ எடுத்து உடனுக்குடன் கொடுத்து விட்டார்கள். அதை எப்படா யூஸ் பண்ணலாம் என்று நானும் வெறித்தனமாகக் காத்துக் கொண்டிருந்தேன். வந்தது 2006 தமிழக சட்டமன்ற பொது தேர்தல்.
தேர்தல் தேதி மே மாதம் 9, 2006. ஆனால் எனக்கு Infosys ரிட்டன் டெஸ்ட் சரியாக ஒரு நாள் முன்னால் மே 8, சென்னையில். மே 7ஆம் தேதியே ஃப்ரெண்டோடு சென்னை வந்து திருவான்மியூரில் தங்கியிருந்தோம். கஸ்தூரிபாய் நகரில் உள்ள செயிண்ட் மைக்கேல் அகாடமியில் நடைபெற்றது. வழக்கம்போல் ஊத்திக் கொண்டது. ரிட்டன் டெஸ்ட் முடிஞ்சதும் துரத்தி விட்டார்கள். சரி, நைட்டே ஊருக்கு கெளம்பலாம் என்று அப்பாவிடம் கேட்டால் "அதெல்லாம் கெளம்பாதே, நாளைக்கு எலெக்சன். ஊரெல்லாம் கலவரமாக இருக்கும். நீ, கெளம்பி வர்றது அவ்வளவு நல்லது இல்லை" என்று ஓட்டு போட வேண்டும் என்ற என் கனவுக்கு சமாதி கட்டி பூ போட்டு விட்டார். யார் என்னுடைய நல்ல ஓட்டை கள்ள ஓட்டாக மாற்றினார்களோ?, தெரியவில்லை. இந்த தேர்தலும் என் ஓட்டுக்காக கொடுத்து வைக்கவில்லை.

அதற்கு பின் இப்போது தான். ஜனவரி 9ஆம் தேதி அதிரடியாய் கிளம்புவதற்கு தயாராய் இருக்கிறேன். ஆபிஸில் லீவ் எல்லாம் கூட அப்ளை செய்து விட்டேன். அரசியலை பொறுத்தவரை "ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கு ஒரு கவலை இல்லை" attitude தான் எனக்கு.

ஆசை எல்லாம் கியூவில் நின்று ஒரு நகத்தில் மை பூசிக் கொண்டு பேலட் பாக்ஸில் உள்ள பட்டனை ஸ்ட்ராங்காக அழுத்த வேண்டும் என்பது மட்டும் தான்!!!

2 comments:

ஆளவந்தான் said...

again join the club...

நானும் இதுவரை ஓட்டு போட்டதில்லை. வாய்ப்பு அமையாமலே போயிடுச்சு...

//ஆசை எல்லாம் கியூவில் நின்று ஒரு நகத்தில் மை பூசிக் கொண்டு பேலட் பாக்ஸில் உள்ள பட்டனை ஸ்ட்ராங்காக அழுத்த வேண்டும் என்பது மட்டும் தான்!!!
//
முதல் முத்தம் மாதிரி?

கணேஷ் said...

ஆளவந்தான்,
//முதல் முத்தம் மாதிரி?//

அப்படி தான் என்று வைத்துக் கொள்ளுங்களேன்!
வருகைக்கு நன்றி!

Related Posts with Thumbnails